ஆப்நகரம்

நெல்லை உச்சிஷ்ட கணபதிக்கு 11ம் தேதி 1008 சங்காபிஷேகம்!

திருநெல்வேலி அருகே மணிமூர்த்தீஸ்வரத்தில் அமைந்து உள்ள ஸ்ரீஉச்சிஷ்ட விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்

TNN 6 Sep 2016, 3:33 pm
திருநெல்வேலி அருகே மணிமூர்த்தீஸ்வரத்தில் அமைந்து உள்ள ஸ்ரீஉச்சிஷ்ட விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Samayam Tamil shangapishegam for nellai ushishta ganpathy
நெல்லை உச்சிஷ்ட கணபதிக்கு 11ம் தேதி 1008 சங்காபிஷேகம்!


ராஜகோபுரத்துடன், நிலை மண்டபங்கள், பிரகாரங்கள், கொடிமரம் கொண்ட மிகவும் பழமையான விநாயகர் கோயிலாக மணிமூர்த்தீஸ்வரம் ஸ்ரீஉச்சிஷ்ட கணபதி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பைரவ தீர்த்தத்தில் நீராடி விநாயகரை வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்.

வருடந்தோறும் சித்திரை மாதம் முதல் தேதியில் சூரிய ஒளி விநாயகர் மீது விழும் அதிசய நிகழ்வு இங்கு காணக் கிடைக்காத ஆச்சரியம் என்று போற்றப்படுகிறது. தாமிரபரணி ஆற்றின் ஈசான பாகத்தில் கோயில் அமைந்துள்ளது சிறப்புக்கு உரியது என்கிறார்கள் பக்தர்கள். இந்தக் கோயிலில் கன்னி விநாயகர் சன்னிதி, ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீவள்ளி, தெய்வானை சன்னிதி, ஸ்ரீதட்சிணகாளி அம்பாள், சந்திரன்,சூரியன் சன்னிதி,சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னிதி உள்ளிட்டவையும் உள்ளன.

இந்தக் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அதன்பின்பு கோயில் கொடிமரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தி நாளான திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. காலை 5 மணிக்கு உச்சிஷ்ட கணபதி ஹோமமும், 7 மணிக்கு விசேஷ அபிஷேகமும், 8 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.

அன்று காலை முதல் இரவு 10 மணி வரை நாள் முழுவதும் கோயில் நடை திறந்திருந்தது. இதைத் தொடர்ந்து வருகிற 8ம் தேதி வரை தினமும் மாலை 5.30 மணிக்கு யாகசாலை பூஜைகள், சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் வழிபாடு, திருவீதியுலா ஆகியவை நடைபெறுகிறது.

8ம் திருநாளான 10ம் தேதி மாலை 5.30 மணிக்கு யாகசாலை பூஜைகள் முடிந்ததும், மூலஸ்தான விநாயகருக்கு 1008 தேங்காய்களால் சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது. 11ம் தேதி காலையில் 1008 சங்காபிஷேகம்,கணபதி உபநிஷத் 1008 ஆவர்த்தி சிறப்பு ஹோமம்,அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்