ஆப்நகரம்

மனக்கவலை நீக்கி மகிழ்ச்சியை அருளும் சாய்பாபா மந்திரம்

மனக்கவலை நீங்க சாய் பாபா மந்திரத்தை கூறி வர, மனம் லேசாகும். மனக்குறை நீங்கி வீட்டில் மகிழ்ச்சி பெருகும்.

Samayam Tamil 8 Oct 2020, 9:35 pm
நம் வாழ்வு ஏற்ற, இறக்கங்கள் நிறைந்தது. நாம் என்ன முயற்சி செய்தாலும் நம் வாழ்வில் வசந்தம் வீசவில்லை, மகிழ்ச்சி ததும்பவில்லை என பலர் புலம்புவதைப் பார்த்திருப்போம்.
Samayam Tamil Sai Baba Mantra


இறைவனுக்கான சில மந்திரங்கள் நம் மன கவலைகளை நீக்கி, மகிழ்ச்சியை தரக்கூடியதாயிருக்கும். அதில் முக்கியமானது சாய்பாபாவின் முக்கிய மந்திரம்.

இந்த மந்திரத்தை நாம் தினமும் ஜெபித்தால் நம் மன கவலை நீங்கும் என்பது ஐதீகம்.

என்ன ஆகுமோ என்ற பயத்தை நீக்கக்கூடிய மந்திரம்

மந்திரம்: “ஓம் சாய் குருவாயே நமஹ ஓம் ஷீரடி தேவாயே நமஹ ஓம் சர்வ தேவ ரூபாயே நமஹ

இந்த மந்திரத்தை நாம் தினமும் காலையில் நீராடிவிட்டு இறைவனை வணங்கிய பின்னர், ‘ஸ்ரீ சாய்பாபா’வை வணங்கி அவரின் திரு உருவத்தின் முன் இந்த மந்திரத்தை தினமும் 9 முறை கூற வேண்டும்.

சிவ புராணம் மாணிக்கவாசகர் அருளிய‌ - நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க பாடல்

வியாழக்கிழமைகளில் சாய்பாபா கோயிலில் அல்லது வீட்டிலேயே அவரின் திரு உருவம் முன் நின்று வணங்கி, முந்திரி பருப்பு அல்லது கற்கண்டு நிவேதனமாக வைத்து பூஜிக்க வேண்டும்.

அதன் பின்னர் இந்த மந்திரத்தை 108 முறை பக்தியுடன் ஜெபித்து வாருங்கள். இதனால் உங்களின் மனதில் இருக்கும் ஒரு இனம் புரியாத பயம் நீங்கும். உங்களின் மனக்கவலை நீங்கி உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் மன மகிழ்ச்சி உண்டாகும்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்