ஆப்நகரம்

சிங்கபெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் ஆராதனை

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டுக்கு முன்னதாக தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு சாலையில் உள்ளது சிங்கபெருமாள் கோவில். இங்கே ஸ்ரீநரசிம்மர் கோயில், புராண புராதனப் பெருமைகளுடன் திகழ்கிறது.

TOI Contributor 20 May 2016, 7:23 pm
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டுக்கு முன்னதாக தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு சாலையில் உள்ளது சிங்கபெருமாள் கோவில். இங்கே ஸ்ரீநரசிம்மர் கோயில், புராண புராதனப் பெருமைகளுடன் திகழ்கிறது.
Samayam Tamil singaperumalkoil temple special pooja today
சிங்கபெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் ஆராதனை


பொதுவாகவே சனிக்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் இங்கு வந்து பக்தர்கள் நிறையபேர் வழிபடுவது வழக்கம். அதேபோல், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வாரந்தோறும் வந்து நரசிம்மரை வழிபடுகிற பக்தர்களும் இருக்கிறார்கள்.

இன்று ஸ்ரீநரசிம்ம ஜயந்தி திருநாள். அவர் அவதரித்த தினம் என்று போற்றிக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சிங்கபெருமாள் கோவிலில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீநரசிம்மருக்கு இன்று காலையில் துவங்கி சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன.

இன்றைய நாளில், கடும் உக்கிரத்துடன் இருக்கும் ஸ்ரீநரசிம்மருக்கு குளிரக்குளிர பானகம் செய்து நைவேத்தியம் செய்து வேண்டிக் கொண்டால், அதில் கோபம் தணிந்து குளிர்ந்து போவார் நரசிம்மர் என்பது ஐதீகம்!

எனவே, பக்தர்கள் பானக நைவேத்தியம் செய்து, ஸ்ரீநரசிம்மருக்கு துளசிமாலை சார்த்தி வழிபட்டார்கள். மாலையில் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன!

அடுத்த செய்தி

டிரெண்டிங்