மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலைக்கு 30 சிறப்பு ரயில்களை இயக்குவதாக திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்கு தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள். வெளிநாட்டு பக்தர்கள் எண்ணிக்கையும் இந்த நாட்களில் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை கோவிலில் நவம்பர் மாதம் முதல் மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையைக்காக திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம் சார்பில் 30 சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை, பழனி, ஆந்திரா, கர்நாடகா உள்பட 30 இடங்களில் இருந்து இந்த சிறப்பு ரயில்கள் சபரிமலை அருகே உள்ள செங்கனூர் ரயில் நிலையம் வரை இயக்கப்படும். இந்த ரயில்களின் நேர அட்டவணை விரைவில் வெளியாகும்.
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்கு தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள். வெளிநாட்டு பக்தர்கள் எண்ணிக்கையும் இந்த நாட்களில் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை கோவிலில் நவம்பர் மாதம் முதல் மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையைக்காக திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம் சார்பில் 30 சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை, பழனி, ஆந்திரா, கர்நாடகா உள்பட 30 இடங்களில் இருந்து இந்த சிறப்பு ரயில்கள் சபரிமலை அருகே உள்ள செங்கனூர் ரயில் நிலையம் வரை இயக்கப்படும். இந்த ரயில்களின் நேர அட்டவணை விரைவில் வெளியாகும்.