ஆப்நகரம்

எழுமலையானை தரிசிக்க இனி கோயம்பேட்டில் சிறப்பு டிக்கெட்

கோயம்பேடு பேருந்து நிலையத்தில், பேருந்து கட்டணத்துடன் சேர்த்து, திருப்பதி எழுமலையானை தரிசனம் செய்வதற்கான சிறப்பு டிக்கெட் இன்று முதல் வழங்கப்படுகிறது.

TNN 1 Aug 2016, 1:55 pm
சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்தில், பேருந்து கட்டணத்துடன் சேர்த்து, திருப்பதி எழுமலையானை தரிசனம் செய்வதற்கான சிறப்பு டிக்கெட் இன்று முதல் வழங்கப்படுகிறது.
Samayam Tamil special dharshan ticket for tirupathi from koyembedu bustand
எழுமலையானை தரிசிக்க இனி கோயம்பேட்டில் சிறப்பு டிக்கெட்


சென்னை கோயம்பேட்டில் இருந்து தினசரி காலை 5 மணி முதல் இரவு 12.30 மணிவரை ஏசி, டீலக்ஸ் மற்றும் சாதாரண பேருந்துகள் என மொத்தம் 70 ஆந்திர அரசு பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படுகின்றன. அதில், மொத்தம் 34 ஏசி மற்றும் டீலக்ஸ் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் இன்று முதல், கோயம்பேடு பேருந்து நிலையத்தில், பேருந்து கட்டணத்துடன் சேர்த்து, திருப்பதி எழுமலையானை தரிசனம் செய்வதற்கான சிறப்பு டிக்கெட்டும் வழங்கப்படுகிறது.

இந்த 34 பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு, அதாவது, ஏசி பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு கீழ் திருப்பதி வரை ரூ.320 பேருந்து கட்டணமாகவும், கூடுதலாக ரூ.300 செலுத்தி சிறப்பு தரிசன டிக்கெட்டும் பெற்றுக் கொள்ளலாம். அதேபோல் மேல் திருப்பதி வரை செல்லும் சூப்பர் டீலக்ஸ் பேருந்துகளுக்கு ரூ.263 பேருந்து கட்டணமாகவும், சிறப்பு தரிசன கட்டணமாக கூடுதலாக ரூ.300-ம் வசூலிக்கப்படுகிறது. இந்த சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை பஸ் கட்டணத்துடன் ஆன்லைனில் http://www.apsrtconline.in என்ற இணையதளம் மூலமும் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் இருந்து முன்பதிவு செய்து செல்லும் பக்தர்கள் காலை 11 மணிக்கும், மாலை 4 மணிக்கும் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்