ஆப்நகரம்

வெக்காளியம்மனுக்கு இன்று விசேஷ பூஜைகள்

திருச்சி உறையூரில் இருந்தபடி உலக மக்கள் அனைவரையும் காத்தருள்கிறாள் வெக்காளி அம்மன். வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, இன்று அவளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

TOI Contributor 10 Jun 2016, 3:21 pm
திருச்சி உறையூரில் இருந்தபடி உலக மக்கள் அனைவரையும் காத்தருள்கிறாள் வெக்காளி அம்மன். வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, இன்று அவளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
Samayam Tamil special pooja for vekkali amman temple woraiyur
வெக்காளியம்மனுக்கு இன்று விசேஷ பூஜைகள்


உஷ்ண சம்பந்தமான நோய்களைத் தீர்த்து வைக்கும் கருணையுள்ளம் கொண்டவள் என்று வெக்காளியம்மனைப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

கர்வம், பொறாமை, பழிவாங்குதல் முதலான துர்குணங்களைப் போக்கும் மகாசக்தி ஸ்ரீவெக்காளித் தாய் என்கிறது கோயிலின் ஸ்தல வரலாறு.

செய்வினை, பில்லிசூனியம், ஏவல் என எவரேனும் கெட்டசக்தியை நடமாட விட்டு, நம்மை முடக்குகிறார்கள் என கலங்குபவர்கள், இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீவெக்காளி அம்மனிடம் தங்கள் கவலையைக் கொட்டித் தீர்த்தால் போதும். பிறகு எந்த தீய சக்தியும் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வாள் தேவி.

செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு வந்து சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு தரிசித்தால் போதும், நிம்மதியும் நிறைவுமாக வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்!

இங்கு தரும் தீர்த்தப் பிரசாதம் விசேஷம். மகத்துவமும் மருத்துவ குணமும் கொண்டது. இந்தத் தீர்த்தத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்று தெளித்தால், தீய சக்தி ஓடிவிடும். வீட்டில் சுபிட்சம் குடிகொள்ளும்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்