ஆப்நகரம்

குண சீலம் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள்!

திருச்சி&நாமக்கல் சாலையில், திருச்சியில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது குணசீலம். இங்கே புராதனப் பெருமையுடன் அமைந்து உள்ளது ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி ஆலயம். ஆவணி மாத நிறைவையொட்டியும் நாளை நிகழும் புரட்டாசி மாதப் பிறப்பை முன்னிட்டும், இன்று வேங்கடவனுக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றன.

TNN 16 Sep 2016, 5:43 pm
திருச்சி&நாமக்கல் சாலையில், திருச்சியில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது குணசீலம். இங்கே புராதனப் பெருமையுடன் அமைந்து உள்ளது ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி ஆலயம். ஆவணி மாத நிறைவையொட்டியும் நாளை நிகழும் புரட்டாசி மாதப் பிறப்பை முன்னிட்டும், இன்று வேங்கடவனுக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றன.
Samayam Tamil special poojas for gunaseelam perumal
குண சீலம் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள்!


இன்றைய நாளில், இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் வந்து குணசீலம் பெருமாளைத் தரிசித்தார்கள்.

இந்தத் தலத்தில் தாயாருக்கு தனியே சந்நிதி இல்லை. பெருமாளின் திருமார்பிலேயே மகாலக்ஷ்மி குடிகொண்டிருப்பதால், தனியே சந்நிதி இல்லாமல், மூலவர் சந்நிதியிலேயே காட்சி தருகிறாள்.

அதேபோல, மனநலம் பாதிக்கப்பட்டவர்களை இங்கு அழைத்து வந்தால், விரைவில் அவர்கள் குணம் பெறுவார்கள் என்கிறது ஸ்தல புராணம். மேலும் கோயிலிலேயே அவர்களை தங்கவைத்து, தினமும் உச்சிகால பூஜையில் பெருமாளுக்கு அபிஷேகித்த விசேஷ தீர்த்தத்தை மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் முகத்தில் தெளிப்பார்கள். அப்படி தண்ணீர் பிரசாதத்தைத் தெளித்து, பெருமாளை தரிசனம் செய்தால், விரைவில் குணமாகிவிடுவார்கள் என்பது ஐதீகம்!

மாதப் பிறப்பை முன்னிட்டு மாத நிறைவை முன்னிட்டும் நடைபெற்ற பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டார்கள் பக்தர்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்