ஆப்நகரம்

சிவராத்திரியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் கண்காணிப்பு தீவிரம்!

மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவை வெள்ளியங்கிரி மலை ஏறும் பக்தர்களை கண்காணிக்க வனத்துறை சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 12 Feb 2018, 5:19 pm
மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவை வெள்ளியங்கிரி மலை ஏறும் பக்தர்களை கண்காணிக்க வனத்துறை சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil special team formed to follow pilgrims in velliangiri for maha shivaratri 2018
சிவராத்திரியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் கண்காணிப்பு தீவிரம்!


கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது வெள்ளியங்கிரி மலை. சிவபெருமான் இந்த மலையில் அமர்ந்து தவம் செய்ததாக கூறப்படுகிறது. இதான்ல ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி அன்று இந்த மலைக்கு அதிக பக்தர்கள் மலை ஏற வருவார்கள்.

இந்நிலையில், இந்த ஆண்டு சிவராத்திரியை முன்னிட்டு, மலை ஏறுவதற்கு கடந்த 6ம் தேதி முதல் வனத்துறையினர் அனுமதித்துள்ளனர். மேலும், நாளை மகா சிவராத்திரி நாள் என்பதால், தமிழகம் மட்டுமி்ல்லாது, மற்ற அண்டை மாநிலங்களிலிருந்தும் அதிகளவு எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள்

இதனனால், பக்தர்களை கண்காணிக்க வனத்துறையினர் சார்பில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மலையில் பிளாஸ்டிக் பொருட்கள், எளிதில் தீ பற்ற கூடிய பொருட்கள் உள்ளிடவற்றை கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்