பிருகு மகரிஷி, லிங்கத்தின் மீது வில்வத்தளங்களை மெதுவாய் தூவி பூஜித்தார். அப்போது வில்வமானது விராட்புருஷனான சிவத்தை அதனுள் அலையெனப் பரவச் செய்தது. இதை அறிந்து உணர்ந்து பூரித்துப் போன வேதவாணி மகாசரஸ்வதி, நாதனின் நாமத்தை வீணாகானத்தில் இசைத்து ஆராதித்தாள்.
ஸ்ரீசரஸ்வதியின் கானத்தில் விநாயகப் பெருமான் லயித்துப் போனான். வாணியும், கணபதியும், காமதேனுவும் ஒருசேர காவிரியின் கரையோரம் வந்தமர்ந்த திருக்காட்சியைக் கண்ட மஹரிஷி நெக்குருகினார்.
கோயிலின் உட்பிராகாரத்தைச் சுற்றி வரும்போது சரஸ்வதி பூஜித்ததற்கு ஆதாரமாக அழகான சரஸ்வதி வீணையேந்தி நாதம் பெருக்கும் சிலை அத்தனை தத்ரூபமாகவும் உயிரோட்டமாகவும் வேறெங்கும் காண முடியாது. இந்தத் தலத்தில் இறைவியின் திருநாமம் ஸ்ரீபாலாம்பிகை!
இந்தத் தலம் திருநெய்த்தானம் என்று அழைக்கப்படுகிறது.
அப்பர் பெருமான், நெய்த்தானத்து நாயகியை ‘‘ஏந்திளமங்கையும் நீயும் நெய்த்தானத் திருந்ததுவே’’ என அகங்குழைத்துப் பாடிப் பரவியுள்ளார்.
தனது திருப்பார்வையின் சிறு வீச்சிலேயே துன்பம் அனைத்தையும் கலைகிறாள், ஸ்ரீபாலாம்பிகை. சரஸ்வதிக்கு அருளிய அம்பிகை என்பதால், ஸ்ரீபாலாம்பிகையை மாணவர்கள் தினமும் வந்து வணங்கிச் செல்கின்றனர். பேனா, நோட்டுப் புத்தகங்கள், ஹால் டிக்கெட் ஆகியவற்றை அவளின் மடியில் வைத்து, வேண்டிக் கொண்டு எடுத்துச் செல்கின்றனர். அப்படி வேண்டிக் கொண்டால், தேர்வில் வெற்றி நிச்சயம் என்பது நம்பிக்கை!
திருநெய்த்தானம் எனும் தில்லைஸ்தானம் தஞ்சாவூருக்கு அருகே உள்ள திருவையாறிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
ஸ்ரீசரஸ்வதியின் கானத்தில் விநாயகப் பெருமான் லயித்துப் போனான். வாணியும், கணபதியும், காமதேனுவும் ஒருசேர காவிரியின் கரையோரம் வந்தமர்ந்த திருக்காட்சியைக் கண்ட மஹரிஷி நெக்குருகினார்.
கோயிலின் உட்பிராகாரத்தைச் சுற்றி வரும்போது சரஸ்வதி பூஜித்ததற்கு ஆதாரமாக அழகான சரஸ்வதி வீணையேந்தி நாதம் பெருக்கும் சிலை அத்தனை தத்ரூபமாகவும் உயிரோட்டமாகவும் வேறெங்கும் காண முடியாது. இந்தத் தலத்தில் இறைவியின் திருநாமம் ஸ்ரீபாலாம்பிகை!
இந்தத் தலம் திருநெய்த்தானம் என்று அழைக்கப்படுகிறது.
அப்பர் பெருமான், நெய்த்தானத்து நாயகியை ‘‘ஏந்திளமங்கையும் நீயும் நெய்த்தானத் திருந்ததுவே’’ என அகங்குழைத்துப் பாடிப் பரவியுள்ளார்.
தனது திருப்பார்வையின் சிறு வீச்சிலேயே துன்பம் அனைத்தையும் கலைகிறாள், ஸ்ரீபாலாம்பிகை. சரஸ்வதிக்கு அருளிய அம்பிகை என்பதால், ஸ்ரீபாலாம்பிகையை மாணவர்கள் தினமும் வந்து வணங்கிச் செல்கின்றனர். பேனா, நோட்டுப் புத்தகங்கள், ஹால் டிக்கெட் ஆகியவற்றை அவளின் மடியில் வைத்து, வேண்டிக் கொண்டு எடுத்துச் செல்கின்றனர். அப்படி வேண்டிக் கொண்டால், தேர்வில் வெற்றி நிச்சயம் என்பது நம்பிக்கை!
திருநெய்த்தானம் எனும் தில்லைஸ்தானம் தஞ்சாவூருக்கு அருகே உள்ள திருவையாறிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது.