ஆப்நகரம்

பிப்.2-ல் பிரகதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு: ஏற்பாடுகள் தீவிரம்

கங்கைகொண்ட சோழபுர பிரகதீஸ்வரர் கோயிலில் 85 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறவிருக்கும் கும்பாபிஷேகத்துக்கான முன்னேற்பாடுகள் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

TNN 31 Jan 2017, 6:16 pm
தஞ்சாவூர்: கங்கைகொண்ட சோழபுர பிரகதீஸ்வரர் கோயிலில் 85 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறவிருக்கும் கும்பாபிஷேகத்துக்கான முன்னேற்பாடுகள் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Samayam Tamil sri brihadeeswarar temple is getting ready for kumbabishekam after 85 years
பிப்.2-ல் பிரகதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு: ஏற்பாடுகள் தீவிரம்


கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வர கோயிலின் கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சரவணவேல்ராஜ் இன்று ஆய்வு ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கங்கைகொண்ட சோழபுர பிரகதீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழா வருகின்ற பிப்ரவரி மாதம் 2ம் தேதியன்று நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கு வரும் பக்தர்கள் எவ்வித சிரமமின்றி கோயிலுக்கு சென்று வர தகுந்த ஏற்பாடுகள் செய்யவதற்கு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

மேலும், பக்தர்களுக்கு தேவயான அடிப்படை வசதிகள், குடிநீர், மருத்துவ வசதி, கழிப்பிட வசதி ஆகியவைகள் முறையாக அமைத்திடவும், வெளி ஊர்களிலிருந்து வரும் பயணிகள் எளிதாக கோயிலுக்கு வருவதற்கு பேருந்து வசதிகளும், இருச்சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு தனியாக இடம் ஒதுக்கப்படவுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் சரவணவேல்ராஜ் தெரிவித்தார்.

இவ்விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு எந்தவித இடையூருமின்றி வந்து செல்லுவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

The Chola kings played a significant role in building Siva temples in Tamilnadu. One of them, ‘Sri Brihadeeswarar temple’ at Gangai Konda Chozhapuram, built by Rajendra Chola is getting ready for kumbabishekam on 2 February after 84 years.

அடுத்த செய்தி

டிரெண்டிங்