ஆப்நகரம்

காஞ்சி வரதராஜர் கோயிலில் பிரம்மோத்ஸவம் துவக்கம்

காஞ்சிபுரம் நகரேஷூ காஞ்சி என்று போற்றப்படுகிறது. அதாவது நகரங்களில் சிறந்தது காஞ்சி மாநகரம் என்று புராண காலத்திலேயே போற்றப்பட்ட பூமி இது.

TOI Contributor 20 May 2016, 7:29 pm
காஞ்சிபுரம் நகரேஷூ காஞ்சி என்று போற்றப்படுகிறது. அதாவது நகரங்களில் சிறந்தது காஞ்சி மாநகரம் என்று புராண காலத்திலேயே போற்றப்பட்ட பூமி இது.
Samayam Tamil sri varadharaja perumal temple brahmosivam
காஞ்சி வரதராஜர் கோயிலில் பிரம்மோத்ஸவம் துவக்கம்


இங்கு சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி என்று சொல்லும் அளவுக்கு ஏராளமான கோயில்கள் உள்ளன. திரும்பிய பக்கமெல்லாம் கோயில்கள் நிறைந்திருக்கிற காஞ்சிபுரத்தில், விஷ்ணு காஞ்சியின் முக்கிய ஆலயமாகத் திகழ்கிறது ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில்.

மிக பிரமாண்டமான ஆலயத்தில், சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்து பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார் ஸ்ரீவரதராஜர். 108 திவ்விய தேசங்களில் ஒன்றான இந்தத் தலம், தமிழகத்தில் உள்ள மிக முக்கியமான பெருமாள் கோயில்களில் இந்தத் தலமும் ஒன்று சொல்லிப் பூரிக்கிறார்கள் பக்தர்கள்.

இங்கு வருடந்தோறும் வைகாசியில் பிரம்மோத்ஸவ விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் வைகாசி பிறந்ததையொட்டி கொடியேற்றத்துடன் துவங்கிய பிரம்மோத்ஸவ விழா, கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இன்று காலை வரதருக்கு சிறப்பு அலங்காரங்களும் பூஜைகளும் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு வரதராஜரின் உத்ஸவத் திருமேனிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பிறகு பூஜைகள் மற்றும் தீபாராதனையுடன் வீதியுலா வந்தார் உத்ஸவர்.

வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோத்ஸவ விழாவையும் சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை வழிபாட்டையும் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் ஆலயத்துக்கு வந்திருந்தனர். சுவாமி தரிசனம் செய்து, வீதி புறப்பாட்டிலும் கலந்து கொண்டார்கள்.

பிரம்மோத்ஸவ விழாவை முன்னிட்டு தினமும் காலையும் மாலையும் வெவ்வேறு வாகனங்களில் ஒவ்வொரு அலங்காரத்தில் திருவீதியுலா வருவார் பெருமாள்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்