ஆப்நகரம்

அரங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசி தினத்தை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் இன்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடந்தது.

TNN 8 Jan 2017, 2:16 pm
திருச்சி: வைகுண்ட ஏகாதசி தினத்தை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் இன்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடந்தது.
Samayam Tamil srirangam ranganathar temple vaikunta ekadasi sorgavasal thirappu 2017
அரங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு


108 திவ்ய தேசங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்றது வைகுண்ட ஏகாதசி விழாவின் அங்கமான சொக்கவாசல் திறப்பு நிகழ்வு.

இந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி தொடங்கிய வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியோடு தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நடைபெற்றது. இதில், நம்பெருமாள் ரத்தின அங்கி, கிளி மாலை மற்றும் திருவாபரணங்கள் சாற்றப்பட்டு பூரண அலங்காரத்தோடு அருள் பாலித்தார்.

பெருமாளின் தரிசனத்துக்காக அலைகடலெனக் கூடியிருந்த பக்தர்கள் அரங்கநாதரின் நாமத்தைச் நெகிழ்ச்சியுடன் உச்சரித்து பரவசமடைந்தனர்.

ஜனவரி 10ஆம் தேதி வரை சொர்க்க வாசல் திறக்கப்படும் என்பதால் இன்னும் தினசரி பக்தர் கூட்டம் ஸ்ரீரங்கத்தில் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் நலனுக்காக அனைத்து கூடுதல் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. 500 காவல்துறையினர் பாதுகாப்பு பணி மேற்கொண்டுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்