ஆப்நகரம்

25-வது ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் ஈஷா சிவராத்திரி திருவிழா

ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மாலைமுதல் இன்னிசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பாடல், நடனம் என இரவு முழுவதும் ஈஷா யோக மையம் களைகட்டும். பல்வேறு நாடுகளில் இருந்து வந்த இசை மற்றும் நடனக் கலைஞர்கள் தங்கள் திறமையை காட்டித் தொடங்கியுள்ளனர்.

Samayam Tamil 4 Mar 2019, 11:01 pm
ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மாலைமுதல் இன்னிசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மஹா சிவராத்திரியான இன்று இரவு நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு ருத்ராட்சம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஆதியோகி பிரதட்சணம் நடைபெறுகிறது.
Samayam Tamil jaggi


ஈஷா யோகா மைய நிறுவனர் சற்குருவின் சொற்பொழிவு இன்று நடக்கிறது. இதில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும், பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக்கழகம் காந்திபுரத்திலிருந்து பூண்டி வரை சிறப்பு பஸ்களை இயக்குகிறது. சிவராத்திரி விழா வெள்ளிக்கிரி மலை மற்றும் அடிவாரத்தில் நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை செய்து வருகிறது.

இதில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டார். அவருக்கு மகா சிவனின் சிலையின் சிறு வடிவம் விருதாக வழங்கப்பட்டது. சமந்தா, நீலிமாராணி உள்ளிட்ட நடிகைகள் இவ்வருடம் சிவராத்திரியில் கலந்துகொண்டனர். காளைகளுக்கு வழிபாடு நடந்தது. 300க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளுக்கும் பூஜை செய்யப்பட்டது.

பாடல், நடனம் என இரவு முழுவதும் ஈஷா யோக மையம் களைகட்டும். பல்வேறு நாடுகளில் இருந்து வந்த இசை மற்றும் நடனக் கலைஞர்கள் தங்கள் திறமையை காட்டித் தொடங்கியுள்ளனர். சத்குருவின் நடனம் இவ்விழாவில் மிகப் பிரபலம்.

’25 ஆண்ட்யுகளாக வெற்றிகரமாக இங்கி சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவை தொலைக்காட்சியில் கண்டுகளுக்கும் அன்பர்களுக்கு என்னுடைய வணக்கம். 70க்கும் குறைவானவர்களை வைத்து முதல் சிவராத்திரி விழா இங்கு கொண்டாடப்பட்டது. எங்களது பக்தர்களின் ஈடுபாட்டின் காரணமாகவே இவ்விழா இவ்வளவு பிரபலம் ஆகியுள்ளது’ என சத்குரு தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்