ஆப்நகரம்

முஸ்லீம் மதத்தவர் நடத்திய விநாயகர் சதுர்த்தி!!

குஜராத் மாநிலத்தில் உள்ள வதோரா பகுதியில், முஸ்லீம் மதத்தவர் தொடங்கி வைத்த விநாயகர் சதுர்த்தி திருவிழா இன்றளவும் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது

Samayam Tamil 19 Sep 2018, 1:03 pm
வரோதா: குஜராத் மாநிலத்தில் உள்ள வதோரா பகுதியில், முஸ்லீம் மதத்தவர் தொடங்கி வைத்த விநாயகர் சதுர்த்தி திருவிழா இன்றளவும் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.
Samayam Tamil முஸ்லீம் மதத்தவர் நடத்திய விநாயகர் சதுர்த்தி!!
முஸ்லீம் மதத்தவர் நடத்திய விநாயகர் சதுர்த்தி!!


விநாயகர் சதுர்த்தி திருவிழா என்பது, இந்தியா முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் இந்து விழாக்களில் ஒன்றாகும். இந்த விழாவின் போது, பக்தர்கள் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று, கடலிலோ ஆற்றிலோ கரைப்பது வழக்கம். இந்த ஊர்வலங்களின் போது, சில நேரங்களில் மதக்கலவரங்களும் உண்டாகின்றன.

இப்படி இருக்கையில், குஜராத் மாநிலம் வதோராவில் முஸ்லீம் மதத்தவர் தொடங்கிய பொது விநாயகர் சதுர்த்தி திருவிழா இன்றளவும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மல்யுத்த வீரரான ஜம்மா தாதா என்பவர், கடந்த 1880 ஆம் ஆண்டு, வதோரா பகுதியில் உடற்பயிற்சிக் கூடம் ஒன்றைத் தொடங்கினார்.முஸ்லீம் மதத்தவரான ஜம்மா தாதா, சுதந்திரப் போராட்ட வீரர் லோக்மன்யா திலக் என்பவர் மீது அதீத பற்றுக் கொண்டவராக இருந்தார்.

இதனிடையே, அவரின் உடற்பயிற்சிக் கூடத்திற்கு வருகை புரிந்த திலக், அவரிடம் பொது விநாயகர் சதுர்த்தி கொண்டாட அறிவுரை வழங்கினார். அவரின் அறிவுரைப்படி, அங்கு விநாயகர் சிலையை நிறுவிய ஜம்மா தாதா, எவ்வித மதபாகுபாடுமின்றி விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடினார்.

அவரைத் தொன்றுத்தொட்டு, இன்றளவும் வதோரா பகுதியில் இருக்கும் அவரின் உடற்பயிற்சிக் கூடத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சமீப காலமாக, மதத்தின் பெயரால் இந்தியாவில் பல பிரிவினைகள் ஏற்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற வரலாறுகள் இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு என்பதை அவ்வப்பொது உணர்த்துகின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்