ஆப்நகரம்

அற்புத பலன்களை தரும் சனிக்கிழமை அமாவாசை தர்பணம்!

பொதுவாக அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்கப்படுவது ஐதீகமாக உள்ளது. அதிலும் நாளை சித்திரை அமாவாசை சனிக்கிழமையில் வந்துள்ளது கூடுதல் விஷேசமாக பார்க்கப்படுகின்றது.

Samayam Tamil 3 May 2019, 1:43 pm

பொதுவாக அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்கப்படுவது ஐதீகமாக உள்ளது. அதிலும் நாளை சித்திரை அமாவாசை சனிக்கிழமையில் வந்துள்ளது கூடுதல் விஷேசமாக பார்க்கப்படுகின்றது.
Samayam Tamil Amavasya Tharpanam


அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்கச் சொல்கின்றது சாஸ்திரம். ஒரு ஆண்டில் 96 தர்பணங்கள் இருப்பதாக விவரிக்கப்படுகின்றது. ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளின் போதும், ஒவ்வொரு மாதத்தில் வரும் அமாவாசை தினத்திலும் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்கப்பட வேண்டும் என ஆச்சார்யர்கள் கூறுகின்றனர்.

ஸ்ரீரங்கம் கோயில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்

தர்பணத்தின் நன்மை:
நாளை (மே 4) சனிக்கிழமை தினத்தில் சித்திரை மாத அமாவாசை வந்துள்ளது. இந்த தினத்தில் முன்னோர்களின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து வணங்க வேண்டும்.

450 வருடங்களாக கண்டுகொள்ளப்படாத ஹம்பி படாவி லிங்கம் - பராமரிக்கும் 86 வயது முதியவர்

அவர்களுக்கு பிடித்த உணவை நைவேத்தியம் செய்யுங்கள். அதோடு உங்களால் முடிந்த இல்லாதோருக்கு அளவிற்கு உணவு வழங்க வேண்டும். குறைந்தது 4 பேருக்காவது வழங்குங்கள்.

700 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் - அதிசய நந்தி கோயில்

அமாவாசை தினத்தில் தர்பணம் கொடுப்பதாலும், பித்ருக்களை நினைத்து செய்யும் நற்காரியங்களால், அதில் மகிழ்ந்து, அவர்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பார்கள். அதனால் எண்ணிலடங்கா பலன்கள் கிடைக்கும்.

அதிசய வேப்ப மரம்- அம்மனை காக்கும் யானை பாதங்கள்

இதன் மூலம் பிள்ளைகளுக்கு பாக்கியம் கிடைக்கப்படுவது உறுதி. தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். தரித்திரம் விலகி, ஐஸ்வர்யம் கிடைக்கும் என ஆச்சார்யர்கள் கூருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்