ஆப்நகரம்

சேலத்தில் திருமலைகிரி கோயில்களில் தலித் மக்கள் சிறப்பு வழிபாடு!

சேலத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட திருமலைகிரி கோயில்களில் மற்றொரு தரப்பினரான தலித் மக்கள் இன்று சிறப்பு வழிபாடு செய்துள்ளனர்.

Samayam Tamil 4 Mar 2019, 11:44 pm
சேலத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட திருமலைகிரி கோயில்களில்மற்றொரு தரப்பினரான தலித் மக்கள் இன்று சிறப்பு வழிபாடு செய்துள்ளனர்.
Samayam Tamil temple


சேலம் திருமலைகிரி ஸ்ரீ சைல கிரீஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை விமர்சையாக நடைபெற்றது. சுவாமி வழிபடுவதில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட பிரச்சினை மோதல் ஏற்படும் சூழல் காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக கும்பாபிஷேகம் தடைப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உத்தரவிடப்பட்டு இரு தரப்பினருக்கும் பேச்சுவார்த்தை மூலம் சுமூக உடன்பாடு எட்டப்பட்டது. இதனையடுத்து நீதிமன்றத்தில் இரு தரப்பினர் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டது.

இந்த வழக்கு வாபற் பெறப்பட்டதையடுத்து திருமலைகிரி பகுதியில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவும் திரும்பப் பெறப்பட்டது. தொடர்ந்து இன்று காலை கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. இருதரப்பினரும் தனித்தனியே சுவாமி வழிபாடு செய்ய அறிவிக்கப்பட்ட நிலையில், மற்றொரு பிரிவினரான தலித் சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வழக்கறிஞர் இமயவரம்பன் தலைமையில், திருமலைகிரி காலனியில் உள்ள மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு பூஜைப் பொருட்களுடன் இன்று பிற்பகல் ஊர்வலமாக சென்று முதலில் சிவன் ஆலயத்திலும் அதனைத் தொடர்ந்து பெருமாள் ஆலயத்திற்குள் சென்று சுவாமி வழிபாடு செய்தனர்.

இது வரலாற்றில் தங்கள் சமூகத்தினருக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று அவர்கள் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்