ஆப்நகரம்

களைகட்டிய குலசை தசரா விழா; சூரசம்ஹார நிகழ்வைக் காண குவிந்த பக்தர்கள்!

தூத்துக்குடி: தசரா பண்டிகையின் உச்சகட்டமாக விளங்கும் சூரசம்ஹாரம் இன்று இரவு நடைபெறுகிறது.

Samayam Tamil 19 Oct 2018, 3:55 pm
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா நடைபெற்று வருகிறது. நமது நாட்டில் மைசூருக்குப் பிறகு, குலசையில் தான் தசரா பண்டிகை மிகப் பிரபலம்.
Samayam Tamil t1


இங்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். அதற்காக அம்மன் உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து வழிபடுவர். இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி, குலசையில் தசரா விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தசரா விழா களைகட்டியது. பல்வேறு ஊர்களில் இருந்து வெவ்வேறு வேடங்களில் பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

மேலும் கரகாட்டம், மேற்கத்திய நடனம், பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. முத்தாரம்மன் கோவிலில் தினசரி இரவில் அம்மன் வீதி உலா வரும்.

அப்போது பல்வேறு கோலங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார். இந்நிலையில் இன்று இரவு 12 மணிக்கு தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Dasara Festival celebration at Kulasekarapattinam in Tuticorin district.

அடுத்த செய்தி

டிரெண்டிங்