ஆப்நகரம்

இன்று ராம நவமி: இவற்றை செய்தால், பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும்!

பங்குனி மாதம், வளர்பிறை சுக்ல பட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் ஸ்ரீ ராமர் பிறந்த தினத்தை நாடு முழுவதும் ராம நவமி தினமாக கொண்டாடுகின்றனர்.

Samayam Tamil 13 Apr 2019, 11:41 am
பங்குனி மாதம், வளர்பிறை சுக்ல பட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் ஸ்ரீ ராமர் பிறந்த தினத்தை நாடு முழுவதும் ராம நவமி தினமாக கொண்டாடுகின்றனர்.
Samayam Tamil Rama Navami


அயோத்தி மற்றும் கோசலை ஆகியவற்றை ஆண்ட அரசர் தசரதரின் மகன் மற்றும் விஷ்ணு பகவானின் 7ஆவது அவதாரமாக இந்துக்களால் நம்பப்படும் தெய்வீகத் தன்மை கொண்ட இராம பிரானின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு இந்துப் பண்டிகை தான் ஸ்ரீ இராம நவமி என்றும் அறியப்படுகிறது. பங்குனி மாதம், வளர்பிறை சுக்ல பட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் ஸ்ரீ ராமர் பிறந்த தினத்தை நாடு முழுவதும் ராம நவமி தினமாக கொண்டாடுகின்றனர். இந்த தினத்தில் நாம் என்ன செய்தால், என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

இராம நவமி 'சுக்ல பட்ச' அல்லது வளர்பிறையில் இந்து சந்திர ஆண்டின் சித்திரை மாதத்தில் ஒன்பதாம் நாள் வரும் நவமியில் வருகிறது. ஆகையால் சித்திரை மாத சுக்லபட்ச நவமி என்று அழைக்கப்படுகிறது. மேலும், ஒன்பதாம் நாளின் இறுதியில் சித்திரை-நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

சில இடங்களில் ராமர் பிறந்த தினத்தோடு முடியும் 10 நாட்களை முன் பத்து என்றும், பிறந்த தினத்திலிருந்து வரும் 10 நாட்களைப் பின் பத்து என்றும் 20 நாட்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர். ராமபிரானின் தீவிர பக்தர்கள், 10 நாட்களுக்கு முன்னரே இராமாயணத்தை படிக்க ஆரம்பித்து, ஸ்ரீராம நவமியன்று பட்டாபிஷேகத்துடன் முடித்து பொங்கல் நெய்வேத்தியம் படைத்து வழிபடுவார்கள்.

இந்த ராம நவமி தினத்தில் ஒவ்வொரு ராமர் கோயில்களிலும் ஸ்ரீராமருக்கு பட்டாபிஷேகம் பூஜைகள் செய்யப்படும். அந்தப் பூஜையில் கலந்து கொண்டு ஸ்ரீராமரை வழிபடுவது சிறப்பாகும். ஒருவேளை பூஜையில் கலந்து கொள்ள முடியாதவர்கள், வீட்டின் பூஜையறையில் பட்டாபிஷேக இராமர் படத்தை வைத்து துளசியால் ஆன மாலையை அணிவித்து பூஜை செய்ய வேண்டும். அதோடு, பழம், வெற்றிலை, பூ இவைகளை வைத்து ஸ்ரீராம நாமத்தைச் சொல்லி அர்ச்சனை செய்தால் நன்மைகள் பல உண்டாகும். மேலும், இராமாயண கதாகாலட்சேபம் கேட்பதோ, இராமாயணம் படிப்பதோ சிறந்தது.

ஸ்ரீராம பிரான் காட்டில் விசுவாமித்திரரோடு வாழ்ந்த சமயத்தில், தாகத்திற்காக நீர்மோரும், பானகமும் அருந்தினர். அதனால், நீர்மோரும், பானகமும் ஸ்ரீராமருக்கு நெய்வேத்தியமாக படைக்கப்படுகிறது. இந்த இரண்டுடன் சேர்த்து நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளை கூட நெய்வேத்தியமாக படைக்கலாம்.

ஸ்ரீராமருக்கு பூஜை செய்த பிறகு நெய்வேத்திய பொருட்களை நம் குழந்தைகளுக்கு உண்ண கொடுக்க வேண்டும். ஸ்ரீ ராம நவமியன்று காலை முதல் உணவு உண்ணாமல் இருந்து ஸ்ரீ ராம நவமி விரதமிருந்து ஸ்ரீ ராம பிரானை வணங்கி வழிபடும் பக்தர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிடைக்கும். மேலும், குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேரும் வாய்ப்பு வரும்.

வாழ்க்கை வளம் பெற்று செல்வ செழிப்பு உண்டாகும். இவ்வளவு ஏன், இராமாயணத்தை முழுமையாக படிக்காமல் போனாலும், ராம் என்ற இரண்டெழுத்து மந்திரத்தை உச்சரித்தாலே ஆணவம், காமம், பேராசை ஆகியவை எல்லாம் அழிந்து அன்பும், அறிவும் பெருகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்