ஆப்நகரம்

தண்டுமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கோவையில் பழமை வாய்ந்த தண்டுமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் கோவையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Samayam Tamil 14 Mar 2019, 10:44 pm
கோவையில் பழமை வாய்ந்த தண்டுமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் கோவையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Samayam Tamil thandu mariyamman kovil


கோவை-அவினாசி சாலை உப்பிலிபாளையம் சிக்னல் அருகே பழமையான தண்டுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இந்த கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்ததால் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கும்பாபிஷேக விழா கடந்த 8-ம் தேதி விக்னேஸ்வர பூஜை, தன பூஜை மற்றும் மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது..

அதைத்தொடர்ந்து தீபாராதனை, புண்யாகம், நவகிரக ஹோமம், தீபாராதனையும், மாலை வாஸ்து சாந்தி, விக்னேஸ்வர பூஜை, தீபாராதனை செய்யப்பட்டு, கருவறையில் தண்டுமாரியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் கோவிலில் கலசங்கள் வைத்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ராஜகோபுரத்தில் 5 கலசங்களும், கருவறையின் மீது 3 கலசங்களும், விநாயகர், கருப்பராயன், நவக்கிரகம் ஆகியவற்றில் தலா ஒரு கலசங்கள் உள்பட 12 கலசங்கள் வைக்கப்பட்டது.தொடர்ந்து சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் தலைமையில் காலையில் ஆறு கால யாக பூஜை செய்யப்பட்டது.

பின்னர் யாக சாலையில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு ராஜகோபுரம், விநாயகர், கருப்பராயன், நவக்கிரகம் ஆகிய சன்னதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, கும்பாபிஷேகத்தை தரிசித்தனர். அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து விழாவில் கந்தசாமி ஆர்ட்ஸ் சினிமா விநியோகஸ்தர் ராஜமன்னார் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானத்தை வழங்கினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்