ஆப்நகரம்

கேரள கோவிலில் துரியோதனனுக்கு படைக்கப்படும் ரம்!

தென் இந்தியாவில் துரியோதனனுக்கு இருக்கும் ஒரே கோவில் கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கோவில். 101 ரம் பாட்டில்கள் கொண்டு கேரளாவில் உள்ள துரியோதனன் கோவிலில் பூஜை நடத்தப்படுகிறது. துரியோதனனுக்கு வருடா வருடம் இதுபோல ரம் படைக்கப்படும்.

Samayam Tamil 19 Mar 2019, 11:26 pm
தென் இந்தியாவில் துரியோதனனுக்கு இருக்கும் ஒரே கோவில் கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கோவில்.
Samayam Tamil duryodhana


101 ரம் பாட்டில்கள் கொண்டு கேரளாவில் உள்ள துரியோதனன் கோவிலில் பூஜை நடத்தப்படுகிறது. துரியோதனனுக்கு வருடா வருடம் இதுபோல ரம் படைக்கப்படும்.
அனைத்து மதத்தினரும் இங்கு வந்த துரியோதனனை வழிபடுபவர். மீனவர்கள் கொடிகள் ஏற்றி வழிபடுவர்.

ஒருமுறை துரியோதனன் அந்த ஊருக்கு வந்தார். அவருக்கு தாகம் ஏற்பட்டது. குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது இந்த ஊர் மக்கள் அவருக்கு கள்ளு கொடுத்துள்ளனர். இதுதான் இக்கோவிலின் தல வரலாறு. அப்போதுமுதல் இங்கு துரியோதனனுக்கு கோவில் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.

துரியோதனனின் தாகம் தணிக்க இவ்விழாவில் அவருக்கு ரம் படைக்கப்படுகிறது.
மது மட்டுமல்லாமல் சைட் டிஷ்ஷாக மாமிச கறி படைக்கப்படுகிறது. மேலும் ஆடைகளும் பரிசளிக்கப்படும் என கோவில் செயலாளர் எஸ்.பி.ஜகதீஷ் கூறுகிறார்.

இதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளில் பணிபுரிந்து விடுமுறைக்கு வீடு திரும்பும் நபர்கள் அங்கிருந்து விலை உயர்ந்த வெளிநாட்டு மதுபானங்களை வாங்கிவந்து துரியோதனனுக்கு படைப்பர். விழா முடிந்ததும் இந்த மது பாட்டில்கள் ஏலத்தில் விடப்படும். அவற்றை வாங்கி பருக பலர் போட்டியிடுவர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்