ஆப்நகரம்

உறியடித்து கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடிய ம.பி. முதல்வா்

மத்திய பிரதேச மாநில முதல்வா் சிவராஜ் சிங் சௌகான் கிருஷ்ண ஜெயந்தியின் முக்கிய நிகழ்வான உறியடி விழாவில் கலந்து கொண்டு கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடினாா்.

Samayam Tamil 4 Sep 2018, 4:06 am
மத்திய பிரதேச மாநில முதல்வா் சிவராஜ் சிங் சௌகான் கிருஷ்ண ஜெயந்தியின் முக்கிய நிகழ்வான உறியடி விழாவில் கலந்து கொண்டு கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடினாா்.
Samayam Tamil Shivraj Singh Chouhan Janmashtami


கோகுலாஷ்டமி என்றழைக்கப்படும் கிருஷ்ண ஜெயந்தி விழா நாடு முழுவதும் திங்கள் கிழமை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தியின் போது பக்தா்கள் அனைவரும் நாள் முழுவதும் விரதம் மேற்கொண்டு இரவு நேரத்தில் பானையில் தயிர் உள்ளிட்ட பொருள்களை உயரத்தில் கட்டி அவற்றை உடைப்பது (உறியடி) வழக்கம்.

நேற்று பல்வேறு பகுதிகளிலும் உறியடி விழா நடைபெற்றது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநில முதல்வா் சிவராஜ் சிங் சௌகான் பொதுமக்களுடன் இணைந்து உறியடித்து கடவுளை வழிபட்டாா். இதனைத் தொடா்ந்து அவா் கூறுகையில், கடவுள் கிருஷ்ணரின் அருள் ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.


கிருஷ்ணரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை அதிகம் உள்ளது. மாநில மக்களுக்கு எனது கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகளை தொிவித்துக் கொள்கிறேன். இந்த விழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம் என்று தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்