ஆப்நகரம்

நலம் தரும் நவராத்திரி 4-ம் நாள் வழிபாடு!

Navaratri Day 4 : நவராத்திரியின் நான்காம் நாளான இன்று நாம் வழிபடவேண்டிய தெய்வம் வைஷ்ணவி தேவி.

Samayam Tamil 24 Sep 2019, 2:48 pm
உலகை காத்து அருளும் அம்பிகை நமக்கெல்லாம் வேண்டிய வரங்களை அருளும் காலம்தான் நவராத்திரி.
Samayam Tamil நலம் தரும் நவராத்திரி 4-ம் நாள் வழிபாடு!
நலம் தரும் நவராத்திரி 4-ம் நாள் வழிபாடு!


நவராத்திரி முதல் மூன்று நாட்கள் லட்சுமிக்கும், அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியதாக தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது.

அதன்படி நவராத்திரி யின் முதல் மூன்று தினங்களில் மலைமகளின் அம்சமான துர்கையை வழிபட்டோம். அந்தவகையில் நவராத்திரியின் நான்காம் நாளான இன்று நாம் வழிபடவேண்டிய தெய்வம் வைஷ்ணவி தேவி.

நலம் தரும் நவராத்திரி 4-ம் நாள் வழிபாடு!


நவராத்திரி விழாவில் ஒவ்வொரு தினத்தில் செய்ய வேண்டிய பூஜை மற்றும் பிரசாதங்களின் விபரம்

நான்காவது நாள்காலையில் முழு அரிசியைக் கொண்டு படிக்கட்டுக் கோலம் போடவேண்டும். பிறகு லட்சுமி அஷ்டோத்திரம், லட்சுமி வழிபாட்டுப் பாடல்களைப் பாடி விஷ்ணுவின் சக்தியான வைஷ்ணவியை வழிபடவேண்டும்.

மாலையில் வைஷ்ணவி தேவிக்கு கதம்ப சாதமும், ஏதேனும் ஒரு சுண்டலும் செய்து நைவேத்தியம் செய்து, வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பிரசாதமாக கொடுக்கவேண்டும்.

நலம் தரும் நவராத்திரி 4-ம் நாள் வழிபாடு!


துர்க்கையின் 9 வடிவங்கள்: நவதுர்க்கை வடிவமும், சிறப்பம்சமும்

இன்று அம்பிகைக்கு கதிர் பச்சை மலர்களால் (மருக்கொழுந்து, தவனம்) அர்ச்சனை செய்யலாம். இன்று 5 வயது பெண்குழந்தைகளை ரோஹிணியாக அலங்கரித்து பூஜை செய்து வணங்கினால் நோய் நொடிகளில் இருந்து விடுபடுவதுடன், ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெறலாம் என்பது நம்பிக்கை!!!

அடுத்த செய்தி

டிரெண்டிங்