ஆப்நகரம்

மங்களம் அருளும் நவராத்திரி 6-ம் நாள் வழிபாடு!

சக்தியை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் மிகவும் முக்கியமானது நவராத்திரி விரதம்.

Samayam Tamil 17 Oct 2018, 2:40 pm
நவராத்திரி விரதத்தைப் போன்று எளிமையானதும் அதேநேரம் மிகுந்த பலன்களைத் தரக்கூடியதுமான வேறு விரதங்கள் இல்லை என்கின்றன புராணங்கள்.
Samayam Tamil மங்களம் அருளும் நவராத்திரி 7-ம் நாள் வழிபாடு!
மங்களம் அருளும் நவராத்திரி 7-ம் நாள் வழிபாடு!


நவராத்தியின் ஒன்பது நாட்களும், சக்தியை, துர்கா, பத்ரக்காளி, ஜகதாம்பாள், அன்னபூரணி, சர்வமங்களா, பைரவி, ஜாந்தி, லலிதா, பவானி மற்றும் மூகாம்பிகா என அலங்கரித்து வழிபடுறோம்.

அந்தவகையில், நவராத்திரியின் ஆறாவது நாளான இன்று, நாம் வழிபட வேண்டிய அம்பிகை, கௌமாரி. இவள் முருகனின் சக்தி என்பதால், கௌமாரி என்று அழைக்கப்படுகிறாள்.

மங்களம் அருளும் நவராத்திரி 7-ம் நாள் வழிபாடு!


இன்றைய தினம் ஏழு வயதுள்ள பெண் குழந்தைகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் வீட்டுக்கு அழைத்து, அவர்களை 'காளிகா' தேவியாக வழிபட வேண்டும். இன்று பேரி வாசிக்கத் தெரிந்தவர்கள் நீலாம்பரி ராகம் இசைப்பது மிகவும் சிறந்தது.

மங்களம் அருளும் நவராத்திரி 7-ம் நாள் வழிபாடு!


அந்தவகையில் நவராத்திரியின் ஏழாவது நாளான இன்று தேங்காய் சாதமும், ஏதேனும் ஒரு நவதானியத்தைக் கொண்டு சுண்டலும் செய்து அம்பிகைக்கு நைவேத்தியம் செய்து, அனைவருக்கும் பிரசாதமாகக் கொடுக்க வேண்டும். இன்று அம்பிகையை தும்பை பூவால் அர்ச்சனை செய்வது மேலும் சிறப்பான பலனை அருளும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்