ஆப்நகரம்

நல்வரம் அருளும் நவராத்திரி 7-ம் நாள் வழிபாடு!

நவராத்திரியின் ஏழாவது நாளான இன்று நாம் வழிபட வேண்டிய தெய்வம் சரஸ்வதி.

Samayam Tamil 16 Oct 2018, 4:15 pm
சக்தியை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் மிகவும் முக்கியமானது நவராத்திரி விரதம்.
Samayam Tamil nava 1


நவராத்திரி முதல் மூன்று நாட்கள் லட்சுமிக்கும், அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியதாக தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது.

அந்தவகையில் நவராத்திரியின் ஏழாம் நாளான இன்று நாம் வழிபட வேண்டிய தெய்வம் சரஸ்வதி. ஏழாவது நாளில் நாம் சரஸ்வதி தேவியை ’சாம்பவி’ ஆக வழிபடவேண்டும். இன்று கும்மி வாத்தியம் தெரிந்தவர்கள் புன்னாகவராளி ராகம் இசைப்பது சிறந்தது.

நல்வரம் அருளும் நவராத்திரி 7-ம் நாள் வழிபாடு!


இன்றைய தினம் எட்டு வயது பெண் குழந்தைகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் வீட்டுக்கு அழைத்து, அவர்களை சாம்பவியாக பாவித்து பூஜிக்க வேண்டும். இன்று எலுமிச்சை சாதமும், ஏதேனும் ஒரு நவதானியத்தில் செய்த சுண்டலையும் அம்பிகைக்கு நைவேத்தியம் செய்து பிரசாதமாக வழங்க வேண்டும்.

மேலும் இன்று பன்னீர் இலைகளைக் கொண்டு அம்பிக்கையை பூஜித்து வழிபட்டால் என்றும் நிலைத்த புகழ் கிடைக்கும் என்பது நம்பிக்கை!!!

அடுத்த செய்தி

டிரெண்டிங்