ஆப்நகரம்

வேண்டும் வரங்களை அருளும் நவராத்திரி 8-ம் நாள் வழிபாடு!

தீயவை எல்லாம் அகலவும், செல்வ வளம் பெருகவும், கல்வி உள்ளிட்ட ஞானங்கள் நிறையவும் கொண்டாடப்படும் பண்டிகையே நவராத்திரி.

Samayam Tamil 17 Oct 2018, 2:41 pm
கலைகளின் அதிபதியான கலைமகளையும், செல்வத்தின் அதிபதியான திருமகளையும், வீரத்தின் அடையாளமான மலைமகளையும் கொண்டாடும் விழாவே நவராத்திரி.
Samayam Tamil navi 1


அந்தவகையில், நவராத்திரி விழாவின் எட்டாவது நாளான இன்று, நாம் வழிபடவேண்டிய தேவி நரசிம்ஹி. குமாரியின் பெயர் துர்கா தேவி. இன்றைய தினம் ஒன்பது வயதுள்ள பெண் குழந்தைகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் வீட்டுக்கு அழைத்து, அவர்களை துர்கையாக பாவித்து பூஜை செய்து, அவர்களுக்கு வஸ்திரம் உள்ளிட்ட மங்கலப் பொருள்களை வழங்கி மகிழ்விக்க வேண்டும்.


இன்றைய தினம் அம்பிக்கைக்கு நைவேத்தியமாக பால் பாயசம், ஏதேனும் ஒரு நவதானியத்தைக் கொண்டு சுண்டலும் செய்து வீட்டுக்கு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும்.

மேலும் இன்று அம்பிகையை விபூதி பச்சை மலர்களை கொண்டு அர்ச்சனை செய்தால் அவள் மனமகிழ்ந்து நாம் வேண்டும் வரங்களை அருள்புரிவாள் என்பது நம்பிக்கை!!!

அடுத்த செய்தி

டிரெண்டிங்