ஆப்நகரம்

கும்ப மேளாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட காவலர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!!

புகழ்பெற்ற கும்பமேளா திருவிழாவில், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Samayam Tamil 28 Sep 2018, 10:30 pm
புகழ்பெற்ற கும்பமேளா திருவிழாவில், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
Samayam Tamil கும்ப மேளாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட காவலர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!!
கும்ப மேளாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட காவலர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!!


அலகாபாத்: உலகப் புகழ்பெற்ற கும்பமேளா திருவிழாவில், சைவ உணவு முறையும், எவ்வித கெட்ட பழக்கமும் இல்லாத காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தேர்வு நடைபெறுகிறது.

அலகாபாத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கும்பமேளா திருவிழா, அடுத்தாண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் திருவிழாவில் உலகம் முழுவதும் இருந்து பல லட்சம் மக்கள் பங்கேற்பர். இதற்காக, சுமார் 10,000 காவலர்களும் அவர்களுடன் பாதுகாப்புப் படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இந்நிலையில், இந்த கும்பமேளா விழாவில், சைவ உணவு முறையைப் பின்பற்றுபவராகவும், மது, புகைப்பிடிப்பது உள்ளிட்ட எவ்வித கெட்ட பழக்கங்களும் இல்லாதவராகவும் இருக்கும் காவலர்களையே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதுமட்டுமின்றி, அவர்களுக்கு வயதுக் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கான காவலர்களைத் தேர்வு செய்யும் பணி நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதேபோல், துணைப்பாதுகாப்புப் படை வீரர்களும் இதே முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் டிசம்பர் மாதம் முடியும் முன்பாக தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்