ஆப்நகரம்

தமிழகம் முழுவதும் களைகட்டிய ஆயுத பூஜை: வீடு, தொழிற்சாலைகளில் சிறப்பு வழிபாடு!

நவராத்திரி பண்டிகையின் முக்கிய நிகழ்வான சரஸ்வதி பூஜை இன்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

Samayam Tamil 18 Oct 2018, 10:22 am
கல்விக்கடவுளான சரஸ்வதியை வணங்கும் வகையில், சரஸ்வதி பூஜையும் மற்றும் தொழில், வர்த்தகம் நிறுவனங்கள், அலுவலகங்களில் ஆயுத பூஜையும் நடத்தப்படுகிறது.
Samayam Tamil தமிழகம் முழுவதும் களைகட்டிய ஆயுத பூஜை!
தமிழகம் முழுவதும் களைகட்டிய ஆயுத பூஜை!


அந்தவகையில் கடந்த ஒன்பது நாட்களாக நடைபெற்று வந்த நவராத்திரி பண்டிகையின் முக்கிய நிகழ்வான ஆயுத பூஜை நாடு முழுவதும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான கடைகள் மற்றும் அலுவலகங்களில், மக்கள் தங்கள் தொழில் சிறக்க வேண்டி சிறப்பு பூஜை நடத்தினர்.

தொழிற்சாலைகளில் வாழை மரம், மாவிலை தோரணம், அலங்கார தோரணங்கள் கட்டி அலங்கரித்தனர். இயந்திரங்களை சுத்தம் செய்து, சந்தனம், குங்குமம் பொட்டு வைத்தும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர். வழிபாட்டுக்குப்பின், தொழிலாளர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும் ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று காலை முதலே ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான மக்கள் கலந்து கொண்டு சாமி செய்து வருகின்றனர். அதேபோல் வடமாநிலங்களில் இன்று தசரா பண்டிகை கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்