ஆப்நகரம்

புதுக்கோட்டை கல்லாலங்குடி முத்துமாரி அம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பிரசித்தி பெற்ற கல்லாலங்குடி முத்துமாரி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.

Samayam Tamil 7 May 2019, 7:23 pm
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பிரசித்தி பெற்ற கல்லாலங்குடி முத்துமாரி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.
Samayam Tamil Temple Car Festival


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி முத்துமாரி அம்மன் கோவில் இப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோவிலாகும் . கடந்த ஆண்டு சுமார் 3 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட இக்கோவிலில் கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் விழா தொடங்கியது. இதனை தொடர்ந்து பூச்சொரிதல் விழா நடைபெற்றது. விழாவினையொட்டி நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு இரவில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில் இன்று தேரோட்ட திருவிழா நடைபெற்றது. விழாவினையொட்டி இன்று காலை முதலே பக்தர்கள் பால்குடம் எடுத்தும் ,அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் நேர்த்திக் கடன்களை செலுத்தினர் . இதனை தொடர்ந்து இன்று மாலை வாணவேடிக்கைகளுடன் தேரோட்டம் நடைபெற்றது .இதில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்