ஆப்நகரம்

புதுக்கோட்டை திருவரங்குளம் அரங்குளநாதசுவாமி திருக்கோயில் வைகாசி விசாக தேரோட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அரங்குளநாதசுவாமி திருக்கோயில் வைகாசி விசாக தேரோட்ட திருவிழா விமர்சியாக நடைபெற்றது.ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

Samayam Tamil 18 May 2019, 12:23 pm
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அரங்குளநாதசுவாமி திருக்கோயில் வைகாசி விசாக தேரோட்ட திருவிழா விமர்சியாக நடைபெற்றது.ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

புதுக்கோட்டை திருக்கோயிலைச் சார்ந்த புதுக்கோட்டை அருகே உள்ள திருவரங்குளம் அருள்மிகு பெரியநாயகி அம்பாள் உடனுறை அருள்மிகு அரங்குளநாதர் சுவாமி திருக்கோவில் வைகாசி விசாக தேர் திருவிழா கடந்த 9-ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனையடுத்து நாள்தோறும் அருள்மிகு பெரியநாயகி அம்பாள் உடனுறை அருள்மிகு அரங்குளநாதர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து அலங்காரம் செய்யப்படு சுவாமி வீதி உலா காட்சிகள் நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து முக்கிய திருவிழாவான தேரோட்ட திருவிழா இன்றுநடைபெற்றது.

இதில் அலங்கரிக்கப்பட்ட 2 தேரில் சிறப்பு பெரிய நாயகி அம்மாள் ஒரு தேரிலும் அருள்மிகு அரங்கநாதசுவாமி மற்றொரு தேரிலும் வீற்றிருகத தேரினை ஆயிரக்கணக்கான பக்த்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர் .தேரில் அமர்ந்தவாறு அருள்மிகு பெரியநாயகி மற்றும் அரங்குளநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்த தேர் திருவிழாவில் திருவரங்குளம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்