ஆப்நகரம்

Saraswathi Pooja 2021: ஆயுத பூஜை 2021, சரஸ்வதி பூஜை வாழ்த்து செய்திகள், வாழ்த்து புகைப்படங்கள்!

நாட்டில் பல பண்டிகைகள் கொண்டாடப்பட்டாலும், நம் தொழில், வேலைக்கு பயன்படுத்தும் உபகரணங்களை தெய்வமாக வணங்கும் முக்கிய பண்டிகையாக ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.

Samayam Tamil 14 Oct 2021, 8:08 am
செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். அந்த வகையில் நவராத்திரி ஒன்பதாம் நாள் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை என கொண்டாடப்படுகிறது.
Samayam Tamil Ayutha Poojai 2020
Ayutha Poojai 2020


ஒரு பெண்ணின் கையால் தான் இறக்க வேண்டும் என்ற வரத்தை வாங்கினான் மகிஷாசுரன். ஏனெனில் ஒரு பெண்ணால் தன்னை கொல்ல முடியாது என்ற ஆணவத்தில் இருந்தான். அதையடுத்து தான் சாகா வரம் பெற்ற எண்ணத்தில் இருந்த மகிஷாசுரன் விண்ணவர்களுக்கும், மண்ணவர்களுக்கும் கொடுமைப்படுத்தி வந்த மகிஷாசுரன் தான் இந்த லோகத்தின் கடவுள் என அனைவரையும் ஆட்டிப்படைத்தான்.



அவனின் அட்டூழியத்தை ஒடுக்கி அனைவரையும் காக்க மூன்று தேவிகளும் சேர்ந்து துர்க்கை அம்மனாக விரதமிருந்து, 8 நாட்கள் கடும் போர் செய்து, 9வது நாளில் மகிஷனை கொன்றார் அன்னை.

முதல் மூன்று நாள் பார்வதி தேவியின் அலங்காரமும், அடுத்த மூன்று நாள் மகாலட்சுமி தேவியின் அலங்காரமும், கடைசி மூன்று நாள் சரஸ்வதி தேவியின் அம்சமாக வணங்கப்படுகிறது.



மகிஷனைக் கொல்ல ஆயுதங்களை பூஜித்த நாள் தான் நாம் ஆயுத பூஜையாகவும், சரஸ்வதி பூஜையாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகின்றோம்.

மகிஷனை அன்னை கொல்ல ஆயுதங்களைப் பூஜித்ததைப் போல, நாமும், நம் அன்றாட பணிகளுக்கு பயன்படுத்தும் உபகரணங்களை வணங்கும் பொருட்டு விமர்சையாக கொண்டாடி வருகிறோம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்