ஆப்நகரம்

பங்குனி உத்திரம் -புராண கதை மற்றும் முக்கியத்துவம் என்ன? - ராமன் சீதையையும் கரம் பிடித்த நாள்

பங்குனி உத்திரம் என்பது சைவக் கடவுளாகிய தமிழ் கடவுள் முருகனின் சிறப்புக் குரிய விரத தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Samayam Tamil 10 Mar 2022, 2:29 pm
பங்குனி உத்திரம் என்பது சைவக் கடவுளாகிய தமிழ் கடவுள் முருகனின் சிறப்புக் குரிய விரத தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
Samayam Tamil panguni uthiram


மாதங்களில் 12வது மாதமான பங்குனியும், நட்சத்திரங்களில் 12வதாக இருக்கும் உத்திரம் வரும் நாள் 12 திருக் கைகள் கொண்ட வேலனுக்கு சிறப்புக்குரிய தினமாக கொண்டாடப்படுகிறது.

மீனாட்சி திருக்கல்யாணம் :
தவ நிலையில் இருந்த சிவனின் மோன நிலையை கலைத்த மன்மதனை எரித்ததால் சோகத்தில் தேவர்கள் இருந்தனர். இதனால் தேவர்களுக்கு ஆறுதலாக சிவ பெருமான் தேவியை இந்த தினத்தில் மணந்ததார் என்பது ஐதீகம்.




இந்த தினத்தில் தான் ராமன் சீதையையும், பரமேஸ்வரன் பார்வதியையும், முருகன் தெய்வானையையும் கரம் பிடித்தனர். இதனால் இந்த பங்குனி உத்திர விரதத்தை கல்யாணத் விரதம், திருமண விரதம் என அழைக்கப்படுகிறது.


பழனியில் சிறப்பு:
அறுபடை வீடுகளில் இந்த பங்குனி உத்திர தினம் கோலாகலமாக கொண்டாடப் பட்டாலும், திண்டுக்கல் பழனியில் திருவிழாவும், தேரோட்டம் என வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திண்டுக்கல்லை சுற்றியுள்ள பகுதியிலிருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு, போகரால் உருவாக்கப்பட்ட நவபாசான பழனி முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. பங்குனி வெயிலில் வெப்பத்தால் சிதைந்து போகாமல் இருக்க மூலிகைகள் கலந்த காவிரி நீரால் குளிர்விக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்