ஆப்நகரம்

விஜயதசமி 2020: வெற்றி தரும் விஜய தசமியை கொண்டாடுவோம்...

அம்பிகையின் வெற்றியை கொண்டாடும் விதமாகவும், நம் வாழ்வின் வெற்றிப் படிகட்டில் கால் வைக்க விஜய தசமி தினத்தை கொண்டாட வேண்டிய நோக்கம் என்ன, அதன் பயன்கள் என்ன தெரியுமா...

Samayam Tamil 24 Oct 2020, 11:12 pm
விஜய தசமியை தசரா, தசைன், தசஹரா, தசேரா என பல்வேறு பெயர்களில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றது. அம்பிகையின் வெற்றியை விஜய தசமி என்றும், ராமனின் வெற்றியை தசரா விழாவாகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.
Samayam Tamil vijayadashami Celebration
Vijayadashami Significance


விஜய தசமி தினத்தை வன்னி நவராத்திரி, வனதுர்க்கை நவராத்திரி என்றும் அழைக்கப்படுவது வழக்கம். மகாத்மியத்தில் மகா நோன்பு என்றும் குறிப்பிடப்படும் நாள் இது தான்.

விஜய தசமி எப்போது கொண்டாடப்படுகிறது?
நவராத்திரி முடிந்து அதற்கு அடுத்த நாள் விஜய தசமி தினம் கொண்டாடப்படுகின்றது. அதாவது புரட்டாசி மாதம் அமாவாசை முடிந்து, அடுத்து வரும் 10வது நாள் விஜய தசமை ஆகும்.
இந்த ஆண்டு 2020 அக்டோபர் 26ம் தேதி இந்த விஜய தசமி, தசரா கொண்டாடப்படுகின்றது.

விஜய தசமி தின வாழ்த்து செய்திகள்: வெற்றியை வரமாக வாரி வழங்கும் அம்பிகை கொண்டாடுவோம்...

எருமை தலை கொண்ட மகிஷாசூரணை வதம் செய்ய, ஒன்பது நாள் கடும் தவம் செய்து, மகிஷியை கொன்று கொற்றவையாக அம்பிகை திகழ்கின்றாள்.

மகிஷனின் தலையை கொய்து விஜயையாக அம்பிகை நின்ற திருநாளை விஜய தசமி என கொண்டாடப்படுகின்றது.

இராவண வதம்:
வட இந்தியாவில், இராவணனை இராமன் வதம் செய்த நாளாக கொண்டாடப்படுகின்றது.

விஜய தசமி தினத்தன்று செய்ய வேண்டியவை!
அம்பிகை மகிஷாசூரனை வதம் செய்ய செல்லும் முன் தன் ஆயுதங்களுக்கு பூஜை செய்து சென்றதாக கூறப்படுகின்றது.

அப்படி, ஆயுத பூஜை தினத்தில் நாம் அன்றாட பயன்படுத்தும் பொருட்களை கடவுளாக எண்ணி நாம் அதற்கு பூஜை செய்து வழிபடுவது வழக்கம். அதன் மறுநாள் நாம் விஜய தசமியாக கொண்டாடடுகின்றோம்.

இந்த தினத்தில் முதல் நாள் நாம் பூஜை செய்த புத்தகங்கள், பொருட்களை பக்தியோடு நெய்வேத்தியம், தீப ஆராதனை செய்து, புத்தகங்களை சில வரிகளாவது படித்தால், கல்வி அபிவிருத்தி ஆகும் என நம்பப்படுகின்றது.

ஆயுத பூஜை செய்த பின்னர், பொதுவாக இந்த விஜய தசமி தினத்தில் அந்த பொருட்களை பயன்படுத்தக் கூடாது. ஒருநாள் ஓய்வளிக்க வேண்டும் என பலரும் கூறுவது உண்டு. ஆனால் நாம் அதை வணங்கி அன்று சிறிது பயன்படுத்துவதால் நன்மை தான் விளையும் என்பது முன்னோர்களின் கூற்று.

அம்பு போடுவது ஏன்?
விஜய தசமி நன்னாளில் சிவன் கோயில்களில் பரிவேட்டை எனும் உற்சவம் நடைப்பெறும். இந்த நாளில் வன்னி மரத்தில் இறைவன் அம்பு விடுவது வழக்கம்.

இதன் மெய் பொருள் என்ன வென்றால், வன்னி மரம் மனிதனாக கருதப்படுகின்றது. இறைவன் வன்னி மரத்தில் அம்பு போடுவது, நமக்கு ஞானத்தை உபதேசிப்பதாக அர்த்தம். அம்புகள் தான் ஞானம்.

பத்தாம் நாள், அதாவது விஜய தசமி அன்று பல கோயில்களில் நடைக்கும் சண்டி ஹோமத்தில் கலந்து கொள்வது மிகவும் சிறப்பானது. சண்டி என்பது முப்பெரும் தேவியரை குறிப்பிடுவதாகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்