ஆப்நகரம்

மொஹரம் முக்கியத்துவத்தை ஒவ்வொரு ஆண்டும் நிறைவேற்றும் இந்து மத பக்தர்

கான்பூர்: இஸ்லாமிய வருடத்தின் முதல் மாதமான மொஹரம் மாதத்தில் 10வது நாள் ஷியா இஸ்லாமியா்களால் துக்க நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

Samayam Tamil 21 Sep 2018, 10:42 pm
நபிகள் நாயகத்தின் பேரனான இமாம் ஹூசேன், ஈராக் நாட்டின் கர்பாலா என்னும் இடத்தில், இஸ்லாமியர்கள் கொள்கைக்காக தனது இன்னுயிரை ஈந்து தியாகம் புரிந்தார்.
Samayam Tamil moharam

இஸ்லாமிய வருடத்தின் முதல் மாதமான மொஹரம் மாதத்தில் 10வது நாள் ஷியா இஸ்லாமியா்களால் துக்க நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த மொஹரம் தினத்தில் தானம் தருவது வழக்கமான பாரம்பரிய கடைப்பிடிப்பு.

கான்பூரை சேர்ந்த ராகேஷ் குப்தா என்பவர் இந்து மதத்தை சேர்ந்தவர். இவர் பழ வியாபாரம் செய்து வருபவர்.


இவர் இந்து மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், இஸ்லாமியர்களின் பண்டிகையான மொஹரம் தியாக திருநாளில் பங்களிக்கும் விதமாக இதில் கலந்து கொள்ளும் மக்களின் பசியை ஆற்றும் வகையில் அவர்களுக்கு பழங்களை அளிக்கும் தியாகத்தை செய்தார்.



மொஹரம் தியாக திருநாளில் ஏதேனும் தியாகம் அல்லது தானம் கொடுத்தால், இறைவனின் ஆசி கிடைக்கும் என்பது மரபு. அதை பின்பற்றும் வகையில் ராகேஷ் குப்தா செய்து வருகின்றார்.

இது அவரின் தாத்தா காலத்திலிருந்து செய்து வருவதாக ராகேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்