ஆப்நகரம்

மதுரை திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக திருவிழா - ஆயிரகணக்கானோர் பால் குட தரிசனம்

மதுரை திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக திருவிழா ஆயிரகணக்கான பக்தர்கள் பால் குடம் சுமந்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Samayam Tamil 18 May 2019, 5:35 pm
மதுரை திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக திருவிழா ஆயிரகணக்கான பக்தர்கள் பால் குடம் சுமந்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக திருவிழா ஆயிரகணக்கான பக்தர்கள் பால் குடம் சுமந்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

முருகனின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது . விழாவில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்து “ அரோகரா ” கோஷம் முழங்கிட சுவாமி தரிசனம் செய்தனர் .

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் சிறப்பு பெற்ற விழாக்களில் ஒன்றான வைகாசி விசாக திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியதையடுத்து , முருகபெருமான் தெய்வானையுடன் தினமும் புஷ்ப அங்கி அலங்காரத்தில் உற்சவர் சன்னதியிலிருந்து புறப்பாடாகி கோயில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்து வந்தார் .

இந்நிலையில் , விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகாசி விசாகமான இன்று அதிகாலையில் சண்முகர் சன்னதியில் எழுந்தருளியுள்ள ஆறுமுகம் கொண்ட சண்முகர் , வள்ளி , தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்