ஆப்நகரம்

Ekadasi Viratham: வைகுண்ட ஏகாதசி 2022 விரதம்: முழுபலனையும் அடையும் வழிகள்

தாயை விட சிறந்த தெய்வமில்லை; காயத்ரியை விட சிறந்த மந்திரமில்லை; ஏகாதசியை விட சிறந்த விரதமில்லை என்கிறது புராணம்.. ஏகாதசி விரதம் மேற்கொள்வதன் மூலமாக தீராத நோய்கள் தீரும், சகல செல்வங்களும் உண்டாகும். முக்திக்கான வழியை அடைவீர்கள் எனபது நம்பிக்கை! Vaikunta Ekadasi Viratham

Samayam Tamil 12 Jan 2022, 6:13 pm
ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசி தினங்களில் விரதம் இருக்க இயலாதவர்கள், மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் இருப்பது சிறப்பான பலனை தரும். மூன்றுகோடி ஏகாதசிகளில் விரதமிருந்த பலனை தர கூடியது என்பதால் இது ‘முக்கோடி ஏகாதசி’ எனவும் அழைக்கப்படுகிறது.
Samayam Tamil God Perumal


ஏகாதசி விரதம் மேற்கொள்வதன் மூலமாக தீராத நோய்கள் நீங்கி, சகல செல்வங்களும் கிடைப்பதோடு, முக்திக்கான வழியை அடைவீர்கள் எனபது தான் இந்த நிகழ்வின் நம்பிக்கை.

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல்நாளான தசமி அன்று ஒருபொழுது உணவு உண்ணவேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையிலேயே கண்விழித்து குளித்து விட்டு, பூஜை செய்து விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

ஏகாதசி விரதத்தை முடிப்பது எப்படி? என்ன உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும் தெரியுமா?
ஏகாதசி திதி முழுவதும் முடிந்தவரை பூரண உபவாசம் இருக்க வேண்டும். குளிர்ந்த நீரை குடிக்கலாம். ஏழு முறை துளசி இலையை சாப்பிடலாம். ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதனால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிட வேண்டும். முதியோர்கள் உடல் நலிவுற்றவர்கள், பூஜையில் வைத்து நிவேதனம் செய்யப்பட்ட பழங்களை சாப்பிடலாம்.

Sorgavasal: வைகுண்ட ஏகாதசி பிறந்த கதையும், சொர்க்க வாசல் பிறந்த கதையும் தெரியுமா?

அன்றைய தினம் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து புராண நூல்களை படிப்பதும், விஷ்ணு சகஸ்ர நாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக பொழுதுபோக்க வேண்டும். ஏகாதசி அன்று விஷ்ணு ஆலயங்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு இறைவனை வழிபடலாம்.

வைகுண்ட ஏகாதசி எப்போது? - பகல் பத்து, இராபத்து முழு விபரங்கள் இதோ..

துவாதசியன்று விரதம்
வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாளான துவாதசியன்று, வைஷ்ணவ நாட்காட்டியில் காட்டியபடி குறிப்பிட்ட நேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்க வேண்டும். விரதத்தை முடிப்பது என்பது நீரை கூட அருந்தாமல் விரதம் இருந்தவர்கள் துளசி தீர்த்தத்தையும், மற்றவர்கள் பகவானுக்கு தானிய உணவை படைத்து (பிரசாதமாக) உண்ணலாம். ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது போன்றே விரதத்தை முடிப்பதும் மிக மிக முக்கியமாகும் இல்லாவிடில் விரதம் இருந்த முழு பலனும் கிடைப்பதில்லை.

Also Read: மார்கழியில் ஏன் திருமணம் செய்யக் கூடாது ; அப்படி செய்தால் என்ன நடக்கும் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்..!

உணவு சாப்பிடும் முன் அதை பெரியோர்களுக்கு வழங்க வேண்டும். அன்று பகலில் தூங்காமல் இருக்க வேண்டும். ஏகாதசி விரதம் மேற்கொள்வதன் மூலமாக தீராத நோய்கள் அகலும், சகல செல்வங்களும் உண்டாகும். பகைவர்கள் அனைவரும் நண்பர்கள் ஆவார்கள். மேலும் முக்திக்கான வழியை அடைவீர்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்