ஆப்நகரம்

Varalakshmi Vratham: மாங்கல்ய வரம் அருளும் வரலட்சுமி விரதம்!

சுமங்கலிகளுக்கான மிக முக்கியமான பண்டிகை வரலட்சுமி விரதம். இந்நாளில் அன்னை மகாலட்சுமியை முழுமனதுடன் மனதார தியானித்து, அவளைச் சரணடைந்தால் செல்வ வளங்கள் பெறுகும் என்பது ஐதீகம்.

Samayam Tamil 24 Aug 2018, 7:56 am
சுமங்கலிகளுக்கான மிக முக்கியமான பண்டிகை வரலட்சுமி விரதம். இந்நாளில் அன்னை மகாலட்சுமியை முழுமனதுடன் மனதார தியானித்து, அவளைச் சரணடைந்தால் செல்வ வளங்கள் பெறுகும் என்பது ஐதீகம்.
Samayam Tamil 29KRDC10A


வரலட்சுமி விரதம் பிறந்த கதை!

மகத நாட்டைச் சேர்ந்த தெய்வ பக்தி நிறைந்த பெண் சாருமதி. இவள், தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண மனிதர்கள் போல் கருதாமல், இறைவனே அவர்களது வடிவில் எழுந்தருளி இருப்பதாக கருதி, அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள். அவளது மனப்பான்மை மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியைத் தந்தது. மகாலட்சுமி, சாருமதியின் கனவில் வரலட்சுமியாக தோன்றி அருள் புரிந்தாள்.

என்னை துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களது இல்லத்தில் நான் வசிப்பேன் என்று அப்போது சாருமதிக்கு அருளிய வரலட்சுமி, அந்த விரத முறையை கூறி மற்றவர்களுக்கு எடுத்துரைக்குமாறும் கேட்டுக் கொண்டாள். சாருமதியும், அந்த விரதத்தைக் கடைபித்து தான் பயனடைந்ததோடு, அதை எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்தாள். இப்படித்தான் வரலட்சுமி விரதம் பிறந்தது. .

விரதம் இருக்கும் முறை:

ஆடி அல்லது ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்னதாக வரும் வெள்ளிக் கிழமை அன்று, வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அதற்கு முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையை மெழுகி, கோலமிட வேண்டும். வீட்டின் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறிய மண்டபம் அமைத்து அலங்கரிக்க வேண்டும். மண்டபத்தின் இரு பக்கங்களிலும் வாழை மரக்கன்று கட்டி, பூக்களால் தோரணம் கட்ட வேண்டும். அதில் தங்கம், வெள்ளி அல்லது சந்தனத்தால் செய்யப்பட்ட வரலட்சுமி தேவியின் படத்தை வைக்க வேண்டும்.


லட்சுமிதேவியின் முன்பாக ஒரு வாழை இலை போட்டு, அதில் பச்சரிசியை பரப்ப வேண்டும். அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை மற்றும் பழங்கள் வைக்க வேண்டும். லட்சுமிக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும். ஒரு கலசத்தில் மஞ்சள் கயிறு கட்டி, அதன் மேல் தேங்காய் வைக்க வேண்டும். தேங்காயிலும், கலசத்திலும் குங்குமம் இட வேண்டும். பின்னர் கலசத்தை அரிசியின் நடுவில் வைக்க வேண்டும்.

தொடர்ந்து முதலில் விநாயகர் பூஜை செய்ய வேண்டும். பின்னர் லட்சுமியை அர்ச்சித்து, தூப- தீபங்கள் காட்ட வேண்டும். அன்னம், பாயசம், பழ வகைகள் நிவேதனம் செய்ய வேண்டும். பின்னர் வரலட்சுமியின் முன் வைத்திருந்த நோன்புச்சரட்டை மஞ்சள், குங்குமம் இட்ட மலர்களோடு சேர்த்து கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். பூஜையின் போது அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகா லட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்க வேண்டும்.


வரலட்சுமி விரதத்தின் மகத்துவம்!

பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பதால், அஷ்ட லட்சுமிகளும் மகிழ்வதாக ஐதீகம். இதனால், திருமணமான பெண்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வம் சேரும். கன்னிப்பெண்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தைகளுக்கு கல்வி ஞானம் கிட்டும். அம்பிகையின் அருளால் விரும்பிய நலன்கள் வாழ்வில் கிடைக்கப்பெறும்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்