ஆப்நகரம்

விநாயகர் விசர்ஜன் செய்யப்படுவது எப்போது?

விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து, விநாயகர் சிலைகளை கரைக்கும் விநாயகர் விசர்ஜன் நிகழ்வு வரும் செப்டம்பர் 12ம் தேதி நடக்க உள்ளது.

Samayam Tamil 4 Sep 2019, 12:30 pm
விநாயகர் என்றாலே மனதில் ஒரு உற்சாகம் பிறக்கும். மற்ற கடவுளை விட மிக எளிமையானவராக இருப்பதால், இவரை அனைவரும் அதிகளவில், அதிக இடங்களில் கொண்டாடுவது வழக்கம்.
Samayam Tamil Ganesh Visarjan


விநாயகர் சதுர்த்தி தினத்தில், வீட்டில் விநாயர் சிலை வைத்து வழிபாடு செய்வது மட்டுமல்லாமல் தெருக்கு தெரு ஒரு பிள்ளையார் சிலை வைத்து வணங்கவும் செய்கின்றனர்.

ஆகமவிதி இல்லை:
மற்ற தெய்வங்களை வழிபாடு செய்ய சில ஆகம விதிகள் உள்ளன. இந்த பொருட்களில் தான் சிலை செய்ய வேண்டும். இப்படி வழிபாடு செய்ய வேண்டும் என பல விதிகள் உள்ளன.

ஆனால் விநாயகருக்கோ அப்படி எந்த ஒரு பெரிய கட்டுப்பாடுகள் இல்லாததால், அவரை சானம், புற்று மண், மஞ்சள், சந்தனம், எருக்கம் வேர், வெல்லம், களிமண் எந்த பொருளினாலும் பிள்ளையாரைப் பிடித்து அதை வணங்குவது வழக்கம்.

விநாயகர் சதுர்த்தி வழிபாடு:
பார்வதி தேவி தான் பூசும் மஞ்சள், சந்தனத்தால் ஒரு உருவத்தைப் பிடித்து அதற்கு உயிர் கொடுத்த நன்னாளாக விநாயகர் சதுர்த்தி தினத்தை கொண்டாடி வருகின்றோம்.

இந்த 2019 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியானது செப்டம்பர் 2 ஆம் தேதி பக்தர்களால் கொண்டாடப்பட்டது.

பொதுவாக விநாயகர் சிலை நிரந்தரமாக வைத்து வழிபாடு செய்யும் தெருவோர கோயிலாக இருந்தாலும் விநாயகர் சிலை ரூபத்தில் கல்லினால் செய்யப்பட்டிருப்பார்.

அப்படி இல்லாமல் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்காக வைப்படும் பெரிய அளவிலான பிள்ளையார் பெரும்பாலும் களிமண்ணால் செய்யப்பட்டிருப்பார். அந்த சிலைகளை விநாயகர் சதுர்த்திக்கு மறு நாளோ, 3, 5, 7 அல்லது 11வது நாளில் அதை நீர் நிலைகளில் (குளம், குட்டை, கண்மாய், ஏரி, ஆறு, கடல்) கரைப்பது வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. பெரும்பாலான இடங்களில் 11வது நாள் விநாயகர் விசர்ஜன் செய்யப்படுகிறது.

விநாயகர் விசர்ஜன் பூஜை
நாள் :12 செப்டம்பர் 2019
சந்திரன் பார்வை அல்லாத நேரம் : காலை 09:11 முதல் மாலை 09:27 வரை
செய்யும் நேரம் :12 மணி 16 நிமிடங்களுக்கு பின் தொடங்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்