ஆப்நகரம்

ரயில் தண்டவாளத்தில் ஆடு வெட்டி ஆயுத பூஜை!

கடலூர் : விருத்தாச்சலம் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் ஆடு வெட்டி ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.

Samayam Tamil 19 Oct 2018, 7:04 am
கடலூர் : விருத்தாச்சலம் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் ஆடு வெட்டி ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.
Samayam Tamil train


ஆயுத பூஜை பல்வேறு அலுவலகங்களில் சாமிக்கு பழங்கள், பொரி உள்ளிட்டவற்றை வைத்து கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் ஆடு வெட்டி கொண்டாடப்பட்ட நிகழ்வு நடந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் ரயில் நிலையத்தில் பொறியாளர் அலுவலகங்கள், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.

அதில் பொறியாளர் பிரிவு அலுவலக ஆயுத பூஜை கொண்டாட்டத்தின் போது, அவர்கள் தண்டவாளத்தை பார்வையிட பயன்படுத்தும் ட்ராலிகளுக்கு பெயிண்ட் அடித்து, ரயில்வே டிராக், பாய்ன்ட்களை கழுவி பொட்டு பூக்கள், சந்தனம் வைத்து வழிபட்டனர். அதோடு தண்டவாளத்திலேயே ஆடு வெட்டி, பூஜை செய்து வழிபட்டனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்