ஆப்நகரம்

விஸ்வகர்மா பூஜை 2022 முக்கியத்துவம் : வாழ்த்து செய்திகள், புகைப்படங்கள் இதோ

தெய்வீக தச்சர், இந்த உலகத்தை படைத்ததாக நம்பப்படும் படைப்பு கடவுளாகவும் என கொண்டாடப்படும் விஸ்வகர்மா ஜெயந்தி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் கடைசி நாளில் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.

Samayam Tamil 16 Sep 2022, 12:03 pm
தேவலோகத்தின் தெய்வீக தச்சர் மற்றும் படைப்புக் கடவுகளாகக் கொண்டாடப்படக்கூடியவர் விஸ்வகர்மா.
Samayam Tamil Vishwakarma Puja


இந்து சமய விசேஷங்களில் இதுவும் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

விஸ்வகர்மா தோற்றம் :
சுயம்புவாக உருவாகியவர் விஸ்வகர்மா என அறியப்படுகிறது. இந்த உலகத்தை உருவாக்கியவர் என்று நம்பப்படுகிறது. விஸ்வகர்மா ஜெயந்தி தினத்தில் விஸ்வகர்மா பூஜை என மிக கோலாகலமாக நாட்டின் பல பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.

மகாளய பட்சம் சிறப்புகள்: அன்னதானம் செய்ய மீண்டும் பூமிக்கு வந்த கர்ணனின் கதை

எப்போது கொண்டாடப்படுகின்றது?
விஸ்வகர்மா ஜெயந்தி தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16 - 19 தேதிக்குள் கொண்டாடப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி 32ம் தேதி கடைப்பிடிக்கப்படுகின்றது.
அந்த வகையில் இந்தாண்டு ஆவணி 32 செப்டம்பர் 17ம் தேதி சனிக்கிழமை விஸ்வகர்மா பூஜை கொண்டாடப்படுகிறது.


விஸ்வகர்மா உருவாக்கியவை :
விஸ்வகர்மா தான் இந்த உலகத்தை உருவாக்கியவர் என்றும், பகவான் கிருஷ்ணர் ஆண்ட துவாரகையை வடிவமைத்தவர் என்றும் கூறப்படுகிறது.
இவர் மிகச்சிறந்த கட்டிடம், நகர வடிவமைப்பாளர் என்றும், தெய்வீக தச்சன் என்றும் ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்ட துறையினரின் கொண்டாட்டம் :

அதே போல் ஸ்தபதி வேதத்தில் இவர் மிகச்சிறந்த இயக்கவியல் மற்றும் கட்டிடக்கலை அறிவியலின் வல்லுநர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

Mahalaya Paksha 2022 : மகாளய பட்சம் - 15 நாள் திதிகளில் தர்ப்பணம், சிராத்தம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?

வட இந்தியாவில் பின்பற்றப்படும் ‘கன்யா சங்கராந்தி’ எனும் இந்து நாள்காட்டியின் கடைசி மாதமான பாதோ மாதத்தின் கடைசி நாளாக கொண்டாடப்படுகின்றது.

அஸ்ஸாம், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் மிக விமர்சையாக கொண்டாடப்படுகின்றது.


தமிழகத்திலும் பல இடங்களில் இந்த விஸ்வகர்மா ஜெயந்தி கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்