ஆப்நகரம்

சகோதரத்துவத்தின் பெருமையை உணர்த்தும் ரக்ஷா பந்தன் விழா!

ஆவணி மாதப் பௌர்ணமி நாளில், சகோதர, சகோதரர்களின் பாசத்தை வெளிப்படுத்தும் நிகழ்வாக ரக்‌ஷா பந்தன் விழா கொண்டாடப்படுகிறது. ராக்கி கயிறு கட்டுவது வழக்கம். இக்கயிறை அணிந்துகொள்வதன் மூலம், அவர்கள் தங்கள் சகோதரிகளுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், இந்த விழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

Samayam Tamil 18 Aug 2021, 9:55 pm
ஆவணி மாதப் பௌர்ணமி நாளில், சகோதர, சகோதரர்களின் பாசத்தை வெளிப்படுத்தும் நிகழ்வாக ரக்‌ஷா பந்தன் விழா கொண்டாடப்படுகிறது.
Samayam Tamil raksh 1
சகோதரத்துவத்தின் பெருமையை உணர்த்தும் ரக்‌ஷா பந்தன் விழா!


ஆண்களையும் பெண்களையும் இணைக்கும் அன்பின் அடையாளமாகவும் மதம், சாதி போன்ற பிளவுகளை இணைக்கு பாலமாகவும் கொண்டாடப்படும் ரக்‌ஷா பந்தன் திருவிழா இந்தியாவின் கலாசார பெருமையை எடுத்துக்கூறும் சிறப்பான நிகழ்வுகளில் ஒன்று.

ரக்ஷா பந்தன் விழா அன்று பெண்கள், தங்கள் சகோதரர்கள் மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக, அவர்கள் கரங்களில் ராக்கி கயிறு கட்டுவது வழக்கம். இக்கயிறை அணிந்துகொள்வதன் மூலம், அவர்கள் தங்கள் சகோதரிகளுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், இந்த விழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க :
ரக்‌ஷா பந்தன் விழா ஏன் இவ்வளவு கோலகலமாகக் கொண்டாடப்படுகிறது?

நமது ரத்தத்தின் ரத்தமான சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்ஷா பந்தன்!!- சிறப்புப் பாடல்கள்!!

ஜாதி, மதம், இனம், மொழி கடந்த ரக்ஷா பந்தனின் உண்மையான வரலாறு!

Raksha Bandhan Wishes: ரக்‌ஷா பந்தன்- சகோதரத்துவத்தை பெருமைப்படுத்தும் நாள்

அந்தவகையில், இந்தாண்டு ரக்ஷா பந்தன் விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆக:22) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வட இந்தியா முழுவதும் பெரும்பாலான கடைகளில் விதவிதமான வடிவங்களில் ராக்கி கயிறுகள் விற்பனைக்கு வந்துள்ளன. மேலும் சகோதர, சகோதரிகளின் பாசத்தை பகிரும் வகையில் புதிய வகை இனிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்