ஆப்நகரம்

Raksha Bandhan 2022 importance: ரக்‌ஷா பந்தன் விழா ஏன் இவ்வளவு கோலகலமாகக் கொண்டாடப்படுகிறது?

சகோதர, சகோதரர்களின் பாசத்தை வெளிப்படுத்தும் ரக்‌ஷா பந்தன் விழா, வரும் ஞாயிற்றுக் கிழமை (ஆக:26) கொண்டாடப்படுகிறது.

Samayam Tamil 11 Aug 2022, 9:17 am
சகோதர, சகோதரர்களின் பாசத்தை வெளிப்படுத்தும் ரக்‌ஷா பந்தன் விழா, வரும் திங்கட் கிழமை (ஆக:3) கொண்டாடப்படுகிறது. ரக்‌ஷா பந்தன் ஏன் கொண்டாடப்படுகிறது, அதன் முக்கியத்துவம் என்ன என்பது குறித்த சிறப்புத் தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
Samayam Tamil raki 5
ரக்‌ஷா பந்தன் விழா ஏன் இவ்வளவு கோலகலமாகக் கொண்டாடப்படுகிறது?


வட இந்தியாவில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் திருவிழா, சகோதர, சகோதரிகளுக்கான ரத்த உறவை வலுப்படுத்தும் வகையிலும், திருமணமாகி புகுந்த வீட்டுக்குச் சென்றுவிட்ட பெண்கள் மீண்டும் தங்கள் பிறந்த வீட்டின் உறவை புதுப்பிக்கும் வகையிலும் கொண்டாடப்படுகிறது.

பாதுகாப்பு பந்தம்!

ரக்ஷா பந்தன் என்றால் ‘பாதுகாப்பு பிணைப்பு’ என்றும், ‘பாதுகாப்பு பந்தம்’ என்றும் பொருள். இந்த நாளில், ஓர் ஆ‌ண் ரக்‌ஷா கயிறைக் கட்டிக் கொள்வது என்பது, அவருக்குக் கயிறு கட்டிய அந்தப் பெண்ணை சகோதரியாகக்கொண்டு அவளின் வாழ்க்கை முழுவதுமான பாதுகா‌ப்‌பி‌ற்கு‌ம், நலத்துக்கும் என்றென்றும் காவலாக இருப்பேன் என்று உறுதி கூறுவதைப் போன்றதாகும்.

பாதுகாப்பு பந்தம்!


அதைப்போலவே கயிறைக் கட்டிய அந்தப் பெண்ணும் அவனுக்கு சகோதரியாகி அவனுடைய நலத்துக்கும், வளத்துக்கும் ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்யும் உறுதியை அளிப்பதாக இத்தினம் எடுத்துக்காட்டுகிறது.

மதங்களையும் தாண்டிய மனிதநேயம்!

ஆவணி மாதப் பௌர்ணமி நாளில், கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் திருவிழா இந்து பண்டிகை என்றாலும் கூட, இது மதங்களையும் தாண்டிய நேசத்தையும், சகோதரத்துவத்தையும் வளர்த்தெடுப்பதால் தற்போது அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மதங்களையும் தாண்டிய மனிதநேயம்!


காட் பிரதர்ஸ்!

இந்தியாவின் கலாசார பெருமையை எடுத்துக்கூறும் இந்த சிறப்பான நாளில் தனக்கு தெரிந்தவர்களை மட்டுமல்ல, அறிமுகமே இல்லாத காவலர்கள், ராணுவ வீரர்கள் என எல்லோரையும் கூட சகோதர, சகோதரிகளாக எண்ணி ராக்கி கயிற்றைக் கட்டும் வழக்கம் உண்டு. குறிப்பாக, வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில், சகோதரிகளே இல்லாத ஆண்களை ‘காட் பிரதர்ஸ்’ (God Brothers) என்று குறிக்கும் விதமாக, அவர்களுக்குப் பல பெண்கள் ராக்கி கட்டுவார்கள்.

காட் பிரதர்ஸ்!


மேலும் படிக்க :

நமது ரத்தத்தின் ரத்தமான சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்ஷா பந்தன்!!- சிறப்புப் பாடல்கள்!!


ஜாதி, மதம், இனம், மொழி கடந்த ரக்ஷா பந்தனின் உண்மையான வரலாறு!

சகோதரத்துவத்தின் பெருமையை உணர்த்தும் ரக்ஷா பந்தன் விழா: ஆக: 3ல் கொண்டாட்டம்!

Raksha Bandhan Wishes: ரக்‌ஷா பந்தன்- சகோதரத்துவத்தை பெருமைப்படுத்தும் நாள்

ரக்‌ஷா பந்தன் எப்படி கொண்டாட வேண்டும்!

ரக்‌ஷா பந்தன் நாளில், பெண்கள் புதிய ஆடைகள் அணிந்து, தமது சகோதரர்களின் ‘மணிக்கட்டில் ராக்கி கட்டும் வரை எதுவும் சாப்பிடாமல் இருப்பர். சகோதரர்கள் ‘நெற்றியில் சிகப்பு குங்குமம் வைத்து,அவர்களுக்கு இனிப்புகள் வழங்கிய பின்பு, மணிக்கட்டில் ராக்கி என்னும் புனிதக் கயிற்றைக் கட்டுவர். இதற்கு பதிலாக, சகோதரர்களும், தங்களது பாசத்தை தெரிவிக்கும் விதமாக சகோதரிகளுக்கு பல பரிசுப் பொருட்களை வழங்குவர்.

ரக்‌ஷா பந்தன் எப்படி கொண்டாட வேண்டும்!


ஆதிகாலத்தில் சுத்தமான மஞ்சள் கொண்டு, பட்டு நூல்களைப் பயன்படுத்தி ராக்கிகளை, கட்டத் தொடங்கினர். தற்போது காலத்திற்க்கேற்ப தங்கம், வெள்ளி மற்றும் பட்டு நூல் இலைகள் என புதுப்புது வடிவங்களில் ராக்கிகள் செய்யப்பட்டு விற்பனையாகிறது.

இப்படி, ஜாதி, மதம், இனம், மொழி என்ற அனைத்து வேறுபாடுகளையும் கடந்து அனைவரையும் ஒன்றினைக்கும் ரக்‌ஷா பந்தன் விழாவை அனைவரும் கொண்டாடுவோம். சகோதரத்துவத்தை வளர்த்தெடுப்போம்.!

அடுத்த செய்தி

டிரெண்டிங்