ஆப்நகரம்

ரக்‌ஷா பந்தன் கொண்டாடும் வழிமுறைகளை இங்கே அறிந்து கொள்ளலாம்...!

சகோதர மனப்பான்மையை உணர்த்தும் ரக்‌ஷா பந்தன் பண்டிகையை எப்படி கொண்டாடுவது? உங்களுக்கு தெரியுமா? இதோ இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

Samayam Tamil 3 Aug 2020, 7:31 am

ஆடி மாதத்தில் வரக்கூடிய பெளர்ணமி அன்று ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. அதாவது இந்தாண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி கொண்டாடப்படும் ரக்‌ஷா பந்தன் பண்டிகையை எப்படி நாம் பின்பற்றுவது என்று இங்கே காணலாம்.
Samayam Tamil Raksha


ரக்‌ஷா பந்தன் ஒரு கொண்டாட்டத்திற்கான தினமாக மட்டும் பார்க்காமல், அது சகோதரன் - சகோதரி இடையே நீண்டு தொடர வேண்டிய முக்கிய உறவாக பார்க்க வேண்டியதும், சகோதரியைப் பாதுகாப்பாக கவனித்துக் கொள்வதும் கடமையாக பார்க்கப்படுகின்றது.
ரக்‌ஷா பந்தன் எப்படி கொண்டாட வேண்டும்?
ஒரு பெண், தனது சகோதரனுக்கோ அல்லது அவர் சகோதரனாக கருதும் நபருக்கு ராக்கி எனப்படும் புனித நூல் கட்டுவதும், அதற்கு அந்த சகோதரன், “உன்னை நான் என் சகோதரியாக ஏற்றுக் கொள்கிறேன். நான் உன்னை இனி பாதுகாக்கும் அறனாக இருப்பேன்.” என கூறும் நாளாக ரக்‌ஷா பந்தன் தினம் பார்க்கப்படுகிறது.

ரக்‌ஷா பந்தன் தோன்றிய கதை மற்றும் அதன் முக்கியத்துவம் தெரியுமா?

பொதுவாக ராக்கி கயிறு கட்டும் முன், தான் சகோதரனாக கருதும் நபருக்கு திலகம் இட்டு, ஆரத்தி எடுத்து பின்னர் அந்த ராக்கி எனும் புனித கயிறு கட்டுதல் நல்லது.

அண்ணன் தங்கச்சி பாசத்துல தல’ய மிஞ்ச யாரும் இல்ல: ரக்ஷா பந்தன் சிறப்பு பாடல்கள்!

ராக்கி கட்டிய அந்த சகோதரிக்கு, சகோதரன் ஏதேனும் ஒரு பரிசுப் பொருள் வழங்குவதும் இந்த ரக்‌ஷா பந்தன் தின வழக்கத்தில் உள்ளது.

சகோதரத்துவத்தை உணர்த்தும் ரக்‌ஷா பந்தன் எப்போது கொண்டாடப்பட வேண்டும்?

ரக்‌ஷா பந்தன் ஒரு இந்துப் பண்டிகையாக இருந்தாலும், தற்போது எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் கொண்டாடும் அல்லது, பிற மதத்தை சேர்ந்தவரையும் சகோதரனாக ஏற்றுக் கொண்ட ஒரு பெண் ராக்கி கட்டும் வரவேற்கத்தக்க வழக்கம் உருவாகி வருகின்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்