ஆப்நகரம்

தஞ்சை பெரியகோயிலில் நாளை தேரோட்டம்!

உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில், நாளை 18ம் தேதி திங்கட்கிழமை திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.

TOI Contributor 17 Apr 2016, 3:48 pm
உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில், நாளை 18ம் தேதி திங்கட்கிழமை திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.
Samayam Tamil tanjore temple car festival
தஞ்சை பெரியகோயிலில் நாளை தேரோட்டம்!

ராஜராஜ சோழ மன்னன் கட்டிய பெரியகோயில், சுமார் ஆயிரம் வருடப் பழமை மிக்கது. கோயிலும் அதன் கட்டுமானமும் இன்றைக்கும் பிரமிக்கச் செய்யும்.
எந்தக் கோயிலிலும் இல்லாத வகையாக, கோயிலின் கோபுரத்தை விட, சுவாமி கருவறையின் விமானம் மிகப்பெரிதாக, பிரமாண்டமான உயரத்துடன் திகழ்வது வேறெங்கும் காண்பதற்கு அரிதான ஒன்று. சுமார் 216 அடி உயரம் கொண்ட இந்த விமானத்தை எப்படிக் கட்டினார்கள் என்று இன்றைய வல்லுநர்களாலும் கூட கணிக்க முடியவில்லை என்பது ஆச்சரியமே!
பிரசித்தி பெற்ற ஆலயத்தில் உள்ள இறைவனின் திருநாமம் பெருவுடையார் எனப்படும் பிரகதீஸ்வரர். இந்த ஆலயத்தில், கடந்த பல வருடங்களாக தேர் இல்லாமல் இருந்தது. பல வருடங்களுக்கு முன்பு, தேர் பழுதாகி, முற்றிலுமாக சிதைந்து விட்டதால், மூன்று வருடங்களுக்கு முன்பு புதிய தேர் உருவாக்கும் பணி நடந்தது. பிரபல ஸ்தபதிகளைக் கொண்டு ஆறுமாதங்களாக தேர் உருவாக்கும் பணி நடந்தது.
கடந்த வருடம் சித்திரை மாதத்தில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இப்போது தஞ்சை பெரியகோயிலில், சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வாக, நாளை திங்கட்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்