ஆப்நகரம்

தஞ்சை வராஹி கோயிலில் பஞ்சமி பூஜை வழிபாடு!

தஞ்சை பெரியகோயிலில், சந்நிதி கொண்டுள்ள ஸ்ரீவராஹி தேவிக்கு நேற்று இரவு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றன.

TOI Contributor 25 Jul 2016, 2:36 pm
தஞ்சை பெரியகோயிலில், சந்நிதி கொண்டுள்ள ஸ்ரீவராஹி தேவிக்கு நேற்று இரவு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றன.
Samayam Tamil tanjore varahi temple panchami pooja
தஞ்சை வராஹி கோயிலில் பஞ்சமி பூஜை வழிபாடு!


மாதந்தோறும் பஞ்சமி திதியில் ஸ்ரீவராஹியை தரிசித்து வழிபட்டால், எதிரிகள் தொல்லை ஒழியும். நினைத்த் காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

சப்த மாதர்களில் ஒருவராகத் திகழ்கிறார் ஸ்ரீவராஹி தேவி. ஆனாலும் பிறகாலத்தில் வராஹிதேவிக்கு தனிச்சந்நிதியும் சிறப்பு வழிபாடுகளும் வரத் துவங்கின.

தஞ்சை பெரிய கோயிலில், பிராகாரப் பகுதியில், ஸ்ரீவராஹி தேவிக்கு பின்னர் சந்நிதி அமைக்கப்பட்டது. செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் பஞ்சமி திதியிலும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் அமர்க்களப்படும். சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும்.

நேற்று பஞ்சமி திதியை முன்னிட்டு, மாலையில் அம்மனுக்கு வழிபாடுகளும் பூஜைகளும் நடைபெற்றன. செந்நிற மலர்களை சமர்ப்பித்து வேண்டிக் கொண்டார்கள் பக்தர்கள்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்