ஆப்நகரம்

Amarnath Temple History: அமர்நாத் பனி லிங்கம் திருக்கோயில் - வரலாறும், புராண கதைகளும்

கஷ்மீரில் அமைந்துள்ள அமர்நாத் பனி லிங்கம் தரிசனம் செய்ய ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் செல்வது வழக்கம். அமர்நாத் கோயிலின் வரலாறு மற்றும் புராண கதைகளை இங்கு விரிவாக காண்போம்.

Samayam Tamil 23 Aug 2019, 1:06 pm
ஒவ்வொரு ஆண்டும் அமர்நாத் பனி லிங்கம் தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான மக்கள் செல்வது வழக்கம்.
Samayam Tamil Amarnath Temple


எங்கு அமைந்துள்ளது:
ஜம்மு காஷ்மீர் பாதல்காம், அனந்த்நாக் பகுதியில் அமைந்துள்ளது அமர்நாத் பனி லிங்க திருக்கோயில். இந்தியாவில் கோடைகாலமாக கருதப்படும் மே முதல் ஆகஸ்ட் வரையில் இந்த பனி லிங்கம் தானாக கால சூழ்நிலையால் உருவாகின்றது.

இந்தியாவின் பல்வேறு திருக்கோயில்கள் உள்ளன. இருப்பினும் பல்வேறு பயங்கரவாத தாக்குதல் நிகழும் மிகவும் அச்சமிகுந்த கோயிலாக இந்த அமர்நாத் கோயில் பார்க்கப்படுவதால், இந்திய ராணுவத்தின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. எனவே இந்த கோயிலில் தரிசனம் செய்ய இந்திய அரசின் முன் அனுமதியைப் பெற்றே இங்கு செல்ல வேண்டும்.இந்த குகை கோயில் கடல் மட்டத்திலிருந்து 3,888 மீட்டர் உயரத்திலும், ஸ்ரீநகரில் இருந்து கிட்டத்தட்ட 141 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது.

புராண கதை:
அமர்நாத் குடைவரை கோயில் சுமார் 5000 ஆண்டுகள் பழைமையானதாக இந்து புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை உருவாகும். அதன் பின்னர் இந்த பனி லிங்கம் உருகி, மீண்டும் உருவாகிறது. இது லிங்கமானது சந்திரனின் வளர் மற்றும் தேயும் காலங்களுக்கு ஏற்ப உருவாவதாக கூறப்படுகிறது.

பார்வதிக்கு வாழ்வின் ரகசியத்தை சிவ பெருமான் கூறும் புராண காதையாகவும் உள்ளது. இங்கு பனிலிங்கம் மற்றும் பிள்ளையார் பனி சிலைகளும் இங்கு உள்ளன.

இந்த இடம் 51 சக்தி பீடங்களில் தேவியின் தொண்டைப் பகுதி விழுந்த இடமாக கூறப்படுகிறது.
இக்குகை 3,888 மீட்டர் உயரத்திலும், ஸ்ரீநகரில் இருந்து கிட்டத்தட்ட 141 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. இஸ்லாமியத் தீவிரவாதிகளின் திடீர்த் தாக்குதல்களுக்கு இலக்காகலாம் என்ற காரணத்தினால் இக்கோயில் இந்திய இராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் உள்ளது. எனவே இந்திய அரசின் முன் அனுமதியைப் பெற்றே இங்கு செல்ல வேண்டும்.
இந்த இடம் 51 சக்தி பீடங்களில் தேவியின் தொண்டைப் பகுதி விழுந்த இடமாகும்.

பலரும் கால்நடையாக அல்லது குதிரைகளின் உதவியுடன் பனிலிங்கத்தை தரிசிக்கின்றனர்.


இறப்பில்லாத புறாக்கள்:
புராண கதை ஒன்றில் சிவ பெருமான், பார்வதி தேவிக்கு இறப்பில்லாத நிலை மற்றும் இறந்தாலும் மீண்டும் பிறப்பெடுப்பது என்பது குறித்து விளக்கிக் கொண்டிருந்தார். அதை ஒரு ஜோடி புறாக்கள் பார்த்து ரகசியத்தை அறிந்து கொண்டதாகவும், அதனால் அமர்நாத் பனி லிங்கம் உள்ள இடத்தில், குளிர் அதிகமாக இருந்தாலும் புறாக்கள் காணப்படுவதாக கூறப்படுகின்றது.

வரலாறு:
40 அடி உயரம் கொண்ட இந்த அமர்நாத் குகை கோயிலுக்கு 11வது நூற்றாண்டில் சூரியமதி என்ற ராணி இந்த கோயிலுக்கு திரிசூலங்கள், பனலிங்கங்கள் மற்றும் பிற புனிதமான சின்னங்கள் பரிசளித்ததாக வரலாறு உள்ளன.


மிக ரம்யமான இந்த திருக்கோயிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க பலரும் விருப்பம் காட்டி வரும் நிலையில், அங்கு அவ்வப்போது நடக்கும் சில தீவிரவாத தக்குதல் மட்டும் பிரச்னையாக பாக்கப்படுகின்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்