ஆப்நகரம்

பெசன்ட் நகர் ரத்னகிரீஸ்வரருக்கு அன்னாபிஷேக விழா!

சென்னை: பெசன்ட் நகர் ரத்னகிரீஸ்வரர் கோவிலில், இன்று மாலை, அன்னாபிஷேக விழா நடக்கிறது.

Samayam Tamil 24 Oct 2018, 5:42 am
சென்னை, பெசன்ட் நகர் ஆறாவது குறுக்குத் தெருவில், பக்த மண்டலிக்கு சொந்தமான, ரத்னகிரீஸ்வரர் கோவில் உள்ளது. பக்தர்கள் காணிக்கையாக அளித்த காய், பழங்கள் இறைவனுக்கு அலங்கரிக்கப்படும்.
Samayam Tamil 8


100 கிலோ அரிசியால், ஒவ்வொரு ஆண்டு, ஐப்பசி மாத பவுர்ணமி நாளில், மாலை, 5:30 மணி முதல், இரவு, 10:00 மணி வரை, அன்னாபிஷேகம் செய்யப்படும்.

பின் அன்னத்துடன் சாம்பார், தயிர் கலந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். இந்த அன்னாபிஷேகத்தை பிரசாதமாக உண்டால், அன்ன சமர்த்தி, குழந்தை பாக்கியம், செல்வங்கள் பெருகும் என்பது நம்பிக்கை. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அன்னாபிஷேக விழா, இன்று மாலை, 5:30 மணிக்கு நடக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்