ஆப்நகரம்

ஸ்ரீ அத்திவரதரை தரிசனம்- பக்தர்களுக்கான ஆடை கட்டுப்பாடு, அர்ச்சனை டிக்கெட் வாங்கும் விபரம் வெளியீடு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு கோயில் குளத்திலிருந்து எடுக்கப்பட்ட ஸ்ரீ அத்தி வரதர் பெருமாளை திரிசிப்பதற்கு வரும் பகதர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விபரங்களை இந்து அறநிலைய துறை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 30 Jun 2019, 5:45 pm
ஸ்ரீ அத்தி வரதர் வைபவத்திற்கான சஹஸ்ரநாம அர்ச்சனை டிக்கெட்டுகள் நாள் ஒன்றுக்கு 500 எண்ணிக்கை மட்டுமே வெளியிடப்படும். அதில் காலை 11.00 மணி தரிசனத்திற்கு 250 டிக்கெட்டுகளும், மாலை 3.00 மணி தரிசனத்திற்கு 250 டிக்கெட்டுகளும் வெளியிடப்படும்.
Samayam Tamil Athi Varadaraja Perumal 1200


மேற்படி அர்ச்சனை டிக்கெட்டுகளை தரிசனத்தேதிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக மட்டுமே ஆன்லைன் முன்பதிவு செய்ய இயலும். 04.07.2019 முதல் சஹஸ்ரநாம அர்ச்சனை மேற்கொள்ளப்படும். இதற்கான அர்ச்சனை டிக்கெட்டுகளை 02.07.2019 முதல் இத்துறை இணையதளமான undefined ல் முன்பதிவு செய்து டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அத்திவரதர் தரிசனம்- கோயில் நிர்வாகம் வெளியிட்ட மிகமுக்கிய அறிவிப்பு!

காலை 11.00 மணி சஹஸ்ரநாம அர்ச்சனைக்கான சேவார்த்திகள் காலை 10.30 மணிக்குள் மேற்கு இராஜகோபுரத்திற்கு வந்து தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் மாலை 03.00 மணி சஹஸ்ரநாம அர்ச்சனைக்கான சேவார்த்திகள் மாலை 02.30 மணிக்குள் மேற்கு இராஜகோபுரத்திற்கு வந்து தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. உரிய நேரத்தில் ஆஜராக தவறினால் தரிசனத்திற்கு உரிமைகோர இயலாது.

அத்தி வரத பெருமாளை எப்போது தரிசிக்க முடியும்?- டிக்கெட் முன்பதிவு விபரம்

சேவார்த்திகள் திருக்கோயிலுக்கு வருகைதரும்போது ஆதார் அட்டையினை கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சேவார்த்திகள் திருக்கோயிலுக்கு வரும்போது பாரம்பரிய உடைகளான வேட்டி, சட்டை/குர்தா, பைஜாமா மற்றும் பெண்கள் சேலை, தாவணி/சுடிதார் (துப்பட்டாவுடன்) வரவும், திருக்கோயில் மரபுகளை காக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குளத்திலிருந்து அத்தி வரதர் வெளியே எடுப்படும் புகைப்படங்கள்

சேவார்த்திகள் திருக்கோயிலுக்குள் எந்தவிதமான உடைமைகளையோ, மின்னனு சாதனங்களையோ கொண்டுவரக்கூடாது.

12 வயதிற்குட்பட்ட குழந்தைகளை உரிய ஆவணங்களுடன் கட்டணம் ஏதுமின்றி உடன் அழைத்துவரலாம்.
ஓரே டிக்கெட்டில் பதிவு செய்த சேவார்த்திகள் அனைவரும் ஒரே நேரத்தில் மேற்கு இராஜகோபுரத்திற்கு வந்து தகவல் தெரிவிக்குமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

கோவில்களில் காம சிற்பங்கள் இருப்பதற்கான காரணம் என்ன?

முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்ய திருக்கோயில் நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது. மேலும் முன்பதிவு செய்த டிக்கெட்டிற்கான தேதியை மாற்றுவதோ, ரத்து செய்வதோ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அதற்கான தொகையினை திரும்பப்பெற இயலாது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்