ஆப்நகரம்

தொடங்கியது அதிசய அத்தி வரதரின் தரிசனம்-நீண்ட வரிசையில் நிற்கும் பக்தர்கள்

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் தான் தற்போது உலகமே திரும்பிப் பார்க்கும் ஆன்மிகத் தலமாக மாறி உள்ளது.

Samayam Tamil 1 Jul 2019, 12:43 pm

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் தான் தற்போது உலகமே திரும்பிப் பார்க்கும் ஆன்மிகத் தலமாக மாறி உள்ளது.
Samayam Tamil athi varadar a


40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்த கோயில் திருக்குளத்தில் வைக்கப்பட்டிருக்கும் அத்தி வரத பெருமாள் ஜூன் 28ம் தேதி வெள்ளிக் கிழமை அதிகாலை வெளியே எடுக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

சிறப்பு பூஜைகள்:
குளத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்ட அத்தி மரத்தால் செய்யப்பட்ட வரத பெருமாளுக்கு ஜல சம்ப்ரோக்‌ஷணம், புண்ணியாவதன ஹோமம் ஆகியவை நேற்று நடத்தப்பட்டது.

ஆகம விதிப்படி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட ஸ்ரீ அத்தி வரதர், பக்தர்கள் தரிசிக்கும் வகையில் திருக்கோயிலின் வசந்த மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அத்தி வரத பெருமாளை எப்போது தரிசிக்க முடியும்?- டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?

பக்தர்களுக்கு அத்தி வரத பெருமாள் 48 நாட்கள் அருள்பாலிக்க உள்ளார். ஜூலை 1 முதல் முதல் 23 வரை சயன கோலத்திலும், ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 17 வரை 24 நாட்கள் நின்ற கோலத்திலும் காட்சி தர உள்ளார்.


அத்திவரதர் தரிசனம்- கோயில் நிர்வாகம் வெளியிட்ட மிகமுக்கிய அறிவிப்பு!
தொடங்கியது தரிசனம்:

இந்நிலையில் பக்தர்கள் தரிசிக்க வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அத்தி வரத பெருமாளை தரிசிக்க அதிகாலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்து வருகின்றனர்.


அத்தி வரதரின் காட்சி 40 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் அதிசய நிகழ்வு என்பதால், பல லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வரக்கூடும் என்பதால் இந்து அறநிலையத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் கோயிலை சுற்றி சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது.

அத்தி வரதர் -ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் புராண வரலாறு


பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக போக்குவரத்துக்காக சிறப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்