ஆப்நகரம்

ஸ்ரீ அத்தி வரத பெருமாள் கோயில் குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டாட்டார்!- புகைப்படங்கள் இதோ

பக்தர்கள் பெரிதும் எதிர் பார்த்த அத்தி வரத பெருமாள் குளத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டு, வரும் ஜூலை 1ம் தேதி முதல் காட்சி அளிக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் கோயில் நிர்வாகம் தடபுடலாக செய்து வருகின்றது.

Samayam Tamil 29 Jun 2019, 1:42 pm
உலகத்தில் இருக்கும் பெரும்பாலான இந்து பக்தர்களின் பெரிய எதிர்பார்ப்பாக மாறி உள்ளார் ஸ்ரீ அத்தி வரத பெருமாள்.
Samayam Tamil Athi Varadhar (1)


காஞ்சிபுரத்தில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் உள்ளது. இத்தனை நாட்கள் பெரிதும் அறியப்படாத இந்த கோயில், அத்தி வரதரால் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றுள்ளார்.

இந்த கோயிலின் மூலவராக வரதராஜ பெருமாள் இருக்கின்றார்.ஆனால் இவர் புராண கதைகளின் படி பழைய சீவிரம் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட தேவராஜ பெருமாள் என கூறப்படுகிறது.

அத்தி வரதர் -ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் புராண வரலாறு
புராண கதைப் படி குளத்தில் அத்தி வரதர் வைக்கப்பட்டுள்ளார். இவர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுக்கப்பட்டு அவருக்கு 48 நாட்கள் சிறப்பு பூஜை செய்யப்படுகின்றது. பின்னர் மீண்டும் சுவாமியை குளத்திலேயே வைத்து விடுகின்றனர்.

1979க்கு பின்னர் ஸ்ரீ அத்தி வரதரை வெளியே வந்து 40 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது இந்தாண்டு அத்தி வரதரை வெளியே கொண்டு வந்து சிறப்பு பூஜை செய்யும் நிகழ்வுக்கான பணிகள் தற்போது நடைப்பெற்று வருகின்றது.

கோவில்களில் காம சிற்பங்கள் இருப்பதற்கான காரணம் என்ன?



வெளியே வந்த அத்தி வரதர்:
அத்தி வரதரை குளத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டு சுத்தம் செய்து ஜூலை 1ம் தேதி முதல் பக்தர்களின் வழிபாட்டிற்கு வைக்க கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

குளத்திலிருந்து அத்தி வரதர் வெளியே எடுப்படும் புகைப்படங்கள்

இதன்படி கோயில் குளத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றிவிட்டு, அத்தி வரதர் இரு நாட்களுக்கு முன்னதாகவே கொண்டு வரப்பட்டுள்ளார்.

அத்தி வரத பெருமாளை எப்போது தரிசிக்க முடியும்?- டிக்கெட் முன்பதிவு விபரம்



குளத்தில் அத்திவரதர் ஐந்து தலை ஆதிசேஷன் படுக்கையில் இருந்து அத்தி வரதன் எழுந்தருளினார். 16 நாக சிலைகள் அத்தி வரதருடன் இருந்தன.

28ம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் அத்திவரதர் திருக்குளத்தில் இருந்து எழுந்தருளி பின்பு 3.10 மணியளவில் வசந்த மண்டபத்தில் சயன கோலத்தில் சேவை சாதித்தார்.

இதன் சிறப்பு புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்