ஆப்நகரம்

நாகதோஷத்தை தீர்த்து வைக்கும் முண்டகக்கன்னி அம்மன் கோவில்!

சென்னை மயிலாப்பூரில் உள்ள முண்டகக்கன்னி அம்மன் கோவில் நாகரை வழிபட்டால் நாக தோஷம், திருமணத்தடைகள் நீங்கும் என்பது ஐதீகம்

Samayam Tamil 22 Oct 2018, 4:04 pm
சென்னை மயிலாப்பூரில் உள்ள முண்டகக்கன்னி அம்மன் கோவில் நாகரை வழிபட்டால் நாக தோஷம், திருமணத்தடைகள் நீங்கும் என்பது ஐதீகம்
Samayam Tamil mundaga kanni amman


சிலரது ஜாதகத்தில் ராகு, கேது தோஷங்கள் இருக்கும். இவர்களுக்கு திருமணம் கைகூடுவது என்பது மிகக்கடினமாக தெரியலாம். திருமணம் நிச்சயம் தள்ளிக்கொண்டே போகும். இவ்வாறு திருமணத்தடைகள், ராகு,கேது தோஷங்கள் இருப்பவர்களுக்கு முதன்மை பரிகாரம் காளஹஸ்தி கோவில் தான். திருப்பதி செல்லும் வழியில் உள்ள இந்த காளஹஸ்தி கோவிலில் ராகு, கேது பரிகாரங்கள் தினமும் நடைபெறும். இங்கு வந்து அமர்ந்தாலே திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

அவ்வாறு திருப்பதி செல்ல முடியாதோர் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பிரசத்திப் பெற்ற ராகு கேது ஸ்தலங்களுக்கு சென்று வரலாம். சென்னைவாசிகளுக்கு மயிலாப்பூரில் உள்ள முண்டகக்கன்னி அம்மன் கோவில், சிறந்த ராகு கேது பரிகார ஸ்தலமாக திகழ்கிறது. இங்கு அம்மன் சன்னதிக்கு பின்புறம், நாக புற்று உள்ளது. இதில் பால், முட்டை வைத்து நாகரை வழிபட்டால், நாக தோஷம் நிவர்த்தி ஆகும். வசதி படைத்தவர்கள், நாகருக்கு சிலையை பிரதிஷ்டை செய்து வழிபடலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்